எஸ்.எஸ்.ராமசாமி படையாச்சியார் வன்னியர் சங்கத்தையும், அதன் கட்சியான உழைப்பாளர் கட்சியையும் காமராஜர் ஆட்சி காலத்தில் காங்கிரஸ் கட்சியுடன் இணைத்ததால் காங்கிரஸ் கட்சி வளர்ச்சி பெற்றது. எனவே வன்னியர்கள் யாரும் 2014 தேர்தலில் வன்னியர்கள் கோரிக்கையை நிறைவேற்றித்தரும் கட்சிகளுக்கு வாக்களித்து காங்கிரஸ் கட்சியை டெபாசிட் இழக்க செய்ய வேண்டும். புதுச்சேரியில் மறைந்த ராஜீவ்காந்தி வன்னியர் சமூகத்தைச் சேர்ந்த ரங்கசாமியை முதல்வர் பதவியில் அமர்த்தினார். ஆனால் தற்போது அவர் முதல்வர் பதவி வகிப்பதை பொறுக்க முடியாமல் சிலர் அவரது ஆட்சிக்கு எதிராக செயல்பட்டு வருகின்றனர். எனவே நாடாளுமன்ற தேர்தலில் என்.ஆர் காங்கிரஸ், அதிமுவுடன் கூட்டணி சேர்ந்து புதுச்சேரி மக்களுக்கு நல்லாட்சி தர வேண்டும்.