சேலம் மாநகர சுகாதார ஆய்வாளராக பணியாற்றுபவர் மணிகண்டன். இவரிடம் பிரவின் என்பவர் தன் மகன் பிறப்பு சான்றிதழ் வேண்டி விண்ணப்பித்திருந்தார்.அந்த சான்றிதழ் வாங்க அரசுக்கு செலுத்த வேண்டிய கட்டணம் ரூ.17 மட்டுமே.ஆனால் மணிகண்டன் ரூ 160 கேட்டுள்ளார்.இதேபோன்று பதிவு செய்த 23 பேரிடமும் அதே (ரு.170) தொகையை கேட்டுள்ளார்.இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் சேலம் கம்யூனிஸ்ட் கட்சியினர் உதவியுடன் மணிகண்டனை அலுவலுகத்திலேயே சிறை பிடித்தனர்.மற்றும் அவரிடம் உள்ள லஞ்சமாக பெற்ற தொகையையும் கைப்பற்றினர்.தகவலறிந்த பல்லப்பட்டி இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் மாநகராட்சி உயர் அதிகாரிகள் அவரை விசாரித்து வருகின்றனர்.இதனிடையே சுகாதார ஆய்வாளர் மணிகண்டன் பணி இடை நீக்கம் செய்யபட்டுள்ளார்.