தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

நாகை மாவட்ட வறட்சிப் பகுதிகளில் அமைச்சர்கள் குழு ஆய்வு

நாகப்பட்டினம் மாவட்டத்தில் வறட்சி பாதித்த பகுதிகளில் முதல்வர் உத்தரவின் பேரில் அமைச்சர்கள் குழு இன்று காலை முதல் ஆய்வு மேற்கொண்டது

News image
Updated On :10 ஜனவரி 2013, 5:49 am

சங்கர்

நாகப்பட்டினம் மாவட்டத்தில் வறட்சி பாதித்த பகுதிகளில் முதல்வர் உத்தரவின் பேரில் அமைச்சர்கள் குழு இன்று காலை முதல் ஆய்வு மேற்கொண்டது. தமிழக நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில், எட்டு அமைச்சர்கள் இந்தக் குழுவில் இடம்பெற்றுள்ளனர்.

நத்தம் விஸ்வநாதன், கே.பி,முனுசாமி, ஆர்.வைத்திலிங்கம், சே.தாமோதரன், கே.ஜெயபால், ஆர்.காமரஜ், செல்லூர் ராஜூ ஆகிய அமைச்சர்களுடன் 9 அதிகாரிகள் மற்றும் கூடுதல் தலைமைச் செயலர் ஸ்ரீதர் உள்பட அதிகாரிகள் குழுவும் இந்த் ஆய்வில் ஈடுபட்டுள்ளனர்.

இவர்கள் இன்று, தரங்கம்பாடி வட்டம் காளியப்பநல்லூர் உள்ளிட்ட வறட்சியால் பாதித்த பகுதிகளைப் பார்வையிட்டு ஆய்வு செய்கின்றனர்.

நாகை அருகே தெத்தி, தலைஞாயிறு, ஆலங்குடி, மணக்குடி, நீர்மூலை உள்ளிட்ட பகுதிகளிலும், வேதாரண்யம், வாய்மேடு பகுதிகளிலும் ஆய்வு மேற்கொள்கின்றனர்.

மாவட்ட ஆட்சியர் து.முனுசாமி உடன் இருந்து, வறட்சியால் பாதித்த பகுதிகளில் உள்ள பிரச்னைகள் குறித்து அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் குழுவுக்கு விளக்கிக் கொண்டிருக்கிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.