47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

திவாகரன் உட்பட 8 பேரிடம் குற்றப்பத்திரிக்கை நகல் அளிப்பு

காதல் திருமணம் செய்து கொண்ட கல்லூரி மாணவனுக்கு கொலை மிரட்டல் விடுத்த வழக்கில் திவாகரன் உட்பட 8 பேர் இன்று நீதிமன்றத்தில் ஆஜராகி குற்றப்பத்திரிக்கை நகலைப் பெற்றுக் கொண்டனர்.

News image
Updated On :5 ஜூலை 2013, 8:33 am

ரவி

காதல் திருமணம் செய்து கொண்ட கல்லூரி மாணவருக்கு கொலை மிரட்டல் விடுத்த வழக்கில் திவாகரன் உட்பட 8 பேர் இன்று நீதிமன்றத்தில் ஆஜராகி குற்றப்பத்திரிக்கை நகலைப் பெற்றுக் கொண்டனர்.

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜரான திவாகரன், பன்னீர்செல்வம், சிவராஜ், ஜெயபிரகாஷ், ரகு உட்பட 8 பேர் இன்று நீதிமன்றத்தில் ஆஜரானார்கள். அப்போது நீதிபதி (பொறுப்பு) சோமசுந்தரம் முன்னிலையில், 8 பேருக்கும் குற்றப்பத்திரிக்கையின் நகல் அளிக்கப்பட்டது.

இதையடுத்து வழக்கு விசாரணை வரும்18ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. அப்போது, வழக்கு விசாரணை மாவட்ட செஷன்ஸ் நீதிமன்றத்துக்கு மாற்றப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.