திவாகரன் உட்பட 8 பேரிடம் குற்றப்பத்திரிக்கை நகல் அளிப்பு
காதல் திருமணம் செய்து கொண்ட கல்லூரி மாணவனுக்கு கொலை மிரட்டல் விடுத்த வழக்கில் திவாகரன் உட்பட 8 பேர் இன்று நீதிமன்றத்தில் ஆஜராகி குற்றப்பத்திரிக்கை நகலைப் பெற்றுக் கொண்டனர்.


காதல் திருமணம் செய்து கொண்ட கல்லூரி மாணவருக்கு கொலை மிரட்டல் விடுத்த வழக்கில் திவாகரன் உட்பட 8 பேர் இன்று நீதிமன்றத்தில் ஆஜராகி குற்றப்பத்திரிக்கை நகலைப் பெற்றுக் கொண்டனர்.
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜரான திவாகரன், பன்னீர்செல்வம், சிவராஜ், ஜெயபிரகாஷ், ரகு உட்பட 8 பேர் இன்று நீதிமன்றத்தில் ஆஜரானார்கள். அப்போது நீதிபதி (பொறுப்பு) சோமசுந்தரம் முன்னிலையில், 8 பேருக்கும் குற்றப்பத்திரிக்கையின் நகல் அளிக்கப்பட்டது.
இதையடுத்து வழக்கு விசாரணை வரும்18ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. அப்போது, வழக்கு விசாரணை மாவட்ட செஷன்ஸ் நீதிமன்றத்துக்கு மாற்றப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...