டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

விஜயகாந்த் கொடுத்த கெடு நாளை முடிவு: அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் விளக்கம் அளிக்க மறுப்பு

அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் 7 பேர் விளக்கம் தருவதற்காக தேமுதிக தலைவர் விஜயகாந்த் அளித்த கெடு நாளை (ஜூலை 10) முடிவடைகிறது.ஆனால் 7 பேரும் விளக்கம் அளிக்கப் போவதில்லை என்று முடிவு

News image
Updated On :3 ஜனவரி 2024, 12:43 pm

அரவிந்தன்

அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் 7 பேர் விளக்கம் தருவதற்காக தேமுதிக தலைவர் விஜயகாந்த் அளித்த கெடு நாளை (ஜூலை 10) முடிவடைகிறது.ஆனால் 7 பேரும் விளக்கம் அளிக்கப் போவதில்லை என்று முடிவு எடுத்துள்ளனர்.  தேமுதிவில் இருந்து மாஃபா பாண்டியராஜன் (விருதுநகர்), மைக்கேல் ராயப்பன் (ராதாபுரம்), தமிழழகன் (திட்டக்குடி), சுந்தர்ராஜன் (மதுரை மத்தி), அருண் பாண்டியன் (பேராவூரணி), சுரேஷ்குமார் (செங்கம்), சாந்தி (சேந்தமங்கலம்) ஆகிய 7 உறுப்பினர்கள் பிரிந்து செயல்பட்டு வருகின்றனர்.

மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிக வேட்பாளருக்கு வாக்களிக்காமல் அதிமுக மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்களுக்கு 7 பேரும் வாக்களித்தனர்.விளக்க நோட்டீஸ்: இதற்கு விளக்கம் கேட்டு ஜூன் 28-ம் தேதி அதிருப்தி எம்.எம்.ஏ.க்கள் 7 பேருக்கும் விஜயகாந்த் நோட்டீஸ் அனுப்பினார். நோட்டீஸில்,  தேமுதிகவின் வேட்பாளருக்கு வாக்களிக்காததால் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்து தாற்காலிகமாக நீக்கப்படுவதாகும், கட்சியிலிருந்து நிரந்தரமாக ஏன் நீக்கக்கூடாது என்பதற்கான விளக்கத்தை ஜூலை 10-ம் தேதிக்குள் அளிக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.அதிருப்தி எம்.எல்.ஏ.க்களுக்கு தேமுதிக தலைமை கொடுத்த கெடு  நாளையுடன் முடிவடைகிறது.ஆனால் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் 7 பேரும் விளக்கம் அளித்து கடிதம் அனுப்பப் போவதில்லை என்று முடிவு எடுத்துள்ளனர்.கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கிவிட்டு விளக்கம் கேட்பதில் நியாயம் இல்லை என்பதால் விளக்கம் அளிக்கப் போவதில்லை என 7 பேரும் முடிவு செய்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.