யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

ஆடிட்டர் ரமேஷ் உடலை ஊர்வலமாக எடுத்துச் செல்ல அனுமதி மறுப்பு: பேச்சுவார்த்தை தீவிரம்

சேலத்தில் நேற்று படுகொலை செய்யப்பட்ட பாஜக மாநில பொதுச் செயலர் ஆடிட்டர் ரமேஷ் உடல் பிரேதப் பரிசோதனை முடிந்து உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அவரது உடலை வீட்டுக்கு ஊர்வலமாக எடுத்துச் செல்ல பாஜகவினர் கோரிக்கை விடுத்தனர். அதற்கு போலீஸார் அனுமதி கொடுக்கவில்லை.

News image
Updated On :20 ஜூலை 2013, 6:23 am

தங்கராஜா

சேலத்தில் நேற்று படுகொலை செய்யப்பட்ட பாஜக மாநில பொதுச் செயலர் ஆடிட்டர் ரமேஷ் உடல் பிரேதப் பரிசோதனை முடிந்து உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அவரது உடலை வீட்டுக்கு ஊர்வலமாக எடுத்துச் செல்ல பாஜகவினர் கோரிக்கை விடுத்தனர். அதற்கு போலீஸார் அனுமதி கொடுக்கவில்லை.

இதனிடையே முக்கிய வீதிகள் வழியாக அவரது உடலை ஊர்வலமாக எடுத்துச் செல்ல அனுமதி கேட்டு போலீஸாருடன் முக்கியப் பிரமுகர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

ரமேஷ் உடலுக்கு பாஜக தலைவர்கள் இல.கணேசன், பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர். இன்று மாலை வரை அவரது உடல் கட்சியினர் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்படும்.

இதனிடையே பாஜக தலைவர்கள் வெங்கய்ய நாயுடு, அருண் ஜேட்லி ஆகியோர் இறுதி மரியாதை செலுத்துவதற்காக வருகின்றனர். அதன்பின்னர், இன்று மாலை சேலம் அஸ்தம்பட்டி மயானத்தில் ரமேஷ் உடல் தகனம் செய்யப்படும் என்று தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.