கடலூரில் சாலையோரம் நின்றிருந்த லாரி மீது அரசுப் பேருந்து மோதிய விபத்தில் 15 பேர் காயமடைந்தனர்.
சிதம்பரத்தில் இருந்து கடலூர் நோக்கி வந்த அரசு பேருந்து கடலூர் சிப்காட் அருகே உள்ள பச்சையாங்குப்பம் என்ற இடத்தில், சாலையோரம் நின்றிருந்த லாரி மீது பின்புறமாக மோதியது. இந்த விபத்தில், பேருந்தில் இருந்த 15 பேர் காயம் அடைந்தனர்.
காயமடைந்தவர்கள் கடலூர் பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.