லக்னௌவை வீழ்த்தி பஞ்சாப் கிங்ஸ் இமாலய வெற்றி!அதிமுக யாருக்கும் அடிமையில்லை : ராகுலுக்கு இபிஎஸ் பதில்விருதுநகர் பட்டாசு ஆலை வெடி விபத்து பலி 23-ஆக உயர்வுதிமுக ஆட்சியில் பட்டாசு ஆலை விபத்துகள் தொடர்கதை: இபிஎஸ்விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து : உரிமையாளரைப் பிடிக்க 4 தனிப்படைகள்!நேஷனல் ஹெரால்டு விவகாரம்: சோனியா, ராகுலுக்கு எதிரான அமலாக்கத்துறை மனு நாளை விசாரணை!மக்கள் பிரச்னைகளுக்கு செவிசாய்க்காதவர் மோடி : மல்லிகார்ஜுன கார்கே பிரசாரம்தமிழ்நாட்டின் வளர்ச்சியை பாஜக தடுக்கிறது: முதல்வர் ஸ்டாலின் பெண்களுக்கு துரோகம் செய்தது காங்கிரஸ் - திரிணமூல்: தேர்தலில் பாடம் புகட்டப்படும் - மோடிதிருச்சி தேவாலயத்தில் மண்டியிட்டு பிரார்த்தனை செய்த விஜய்!
/

விருதுநகர் அருகே மரத்தில் பைக் மோதிவிவசாயி சாவு

விருதுநகர் அருகே சாலையோர மரத்தில் மோதி விவசாயி படுகாயம் அடைந்து ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார்.

Updated On :2 ஜூன் 2013, 5:39 pm

விருதுநகர் அருகே சாலையோர மரத்தில் மோதி விவசாயி படுகாயம் அடைந்து ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார்.

    இது தொடர்பாக ஆமத்தூர் போலீஸார் கூறியதாவது: விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே விஸ்வநத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி கருப்பசாமி(54). இவரது சொந்த வேலையின் காரணமாக சனிக்கிழமை இரவு மதுரை வரையில் இரு சக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது, அங்கு பணிகளை முடித்துக் கொண்டு அதிகாலையில் சிவகாசிக்கு புறப்பட்டு வந்தார். அப்போது விருதுநகர்-சிவகாசி சாலையில் மத்தியசேனைப் பகுதியில் வந்து கொண்டிருந்த போது எதிர்பாரத விதமாக சாலையோர புளியமரத்தில் பைக் மோதியது. இதில், கருப்பசாமி படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

     இது குறித்து தகவலறிந்த ஆமத்தூர் போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அதையடுத்து, சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து போலீஸார் விசாரணை செய்து வருகிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.