ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

கடலில் சூறைக்காற்று: தூத்துக்குடி விசைப்படகுகள் கரை திரும்பின

தூத்துக்குடி மீன்பிடித் துறைமுகத்திலிருந்து 200-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் இன்று அதிகாலை 5 மணியளவில் கடலுக்குச் சென்றனர். தூத்துக்குடியிலிருந்து சுமார் 25

News image
Updated On :8 ஜூன் 2013, 2:48 pm

INBARAJ

கடல்பகுதியில் சூறைக்காற்று வீசியதால் தூத்துக்குடியிலிருந்து கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற 200-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் இன்று கரைக்குத் திரும்பின.

தூத்துக்குடி மீன்பிடித் துறைமுகத்திலிருந்து 200-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் இன்று அதிகாலை 5 மணியளவில் கடலுக்குச் சென்றனர். தூத்துக்குடியிலிருந்து சுமார் 25 கடல் மைல் தொலைவில் அவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, திடீரென பயங்கர சூறைக்காற்று வீசியதாகக் கூறப்படுகிறது.மணிக்கு 80 முதல் 90 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த சூறைக்காற்று வீசியதால், மீனவர்கள் மீன்பிடிக்க முடியாமல் திணறினராம். படகுகளை நிலைநிறுத்த முடியாமல் தவித்த மீனவர்கள், தங்களது விசைப்படகில் உள்ள தொலைத்தொடர்பு கருவிகள் மூலம் சக மீனவர்களுடன் தொடர்புகொண்டனர்.

இருப்பினும், தொடர்ந்து காற்று பலமாக வீசியதால் மீனவர்கள் கரை திரும்ப முடிவு செய்தனர். இதையடுத்து, அனைத்துப் படகுகளும் கரைக்கு கொண்டுவரப்பட்டன. வழக்கமாக இரவு 9 மணியளவில் கரைக்கு வர வேண்டிய அனைத்து விசைப்படகுகளும், பகல் 2 மணிக்குள் கரைக்கு வந்து சேர்ந்தன.இதனால் எதிர்பார்த்த அளவுக்கு மீன்களைப் பிடிக்க முடியவில்லை எனவும், மீன்பிடித் தடைக்காலம் முடிந்து ஒருவாரம்கூட ஆகாத நிலையில், சூறைக்காற்று வீசியதால் தங்களது தொழில் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மீனவர்கள் தெரிவித்தனர்.நாளொன்றுக்கு ஒரு விசைப்படகு மூலம் சுமார் 50 ஆயிரம் ரூபாய் அளவுக்கு மீன்கள் பிடிக்கும் தங்களுக்கு, அதிகளவில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது என்றனர் அவர்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.