இருப்பினும், தொடர்ந்து காற்று பலமாக வீசியதால் மீனவர்கள் கரை திரும்ப முடிவு செய்தனர். இதையடுத்து, அனைத்துப் படகுகளும் கரைக்கு கொண்டுவரப்பட்டன. வழக்கமாக இரவு 9 மணியளவில் கரைக்கு வர வேண்டிய அனைத்து விசைப்படகுகளும், பகல் 2 மணிக்குள் கரைக்கு வந்து சேர்ந்தன.இதனால் எதிர்பார்த்த அளவுக்கு மீன்களைப் பிடிக்க முடியவில்லை எனவும், மீன்பிடித் தடைக்காலம் முடிந்து ஒருவாரம்கூட ஆகாத நிலையில், சூறைக்காற்று வீசியதால் தங்களது தொழில் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மீனவர்கள் தெரிவித்தனர்.நாளொன்றுக்கு ஒரு விசைப்படகு மூலம் சுமார் 50 ஆயிரம் ரூபாய் அளவுக்கு மீன்கள் பிடிக்கும் தங்களுக்கு, அதிகளவில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது என்றனர் அவர்கள்.