தூத்துக்குடி குறிஞ்சிநகரைச் சேர்ந்தவர் ராஜாமணி (41). திமுகவைச் சேர்ந்த இவர், தூத்துக்குடி மாநகராட்சியின் 4-வது வார்டு கவுன்சிலராக உள்ளார். ராஜாமணி தனது நண்பர்கள் சிலருடன் அங்குள்ள மதுக்கூடத்தில் சனிக்கிழமை இரவு பேசிக் கொண்டிருந்தாராம்.அப்போது, மற்றொரு திமுகவைச் சேர்ந்த வழக்குரைஞரும், 48-வது வார்டு கவுன்சிலருமான அன்பரசன் தனது நண்பர்கள் நால்வருடன் சேர்ந்து பேசிக் கொண்டிருந்தாரம். அப்போது, ராஜாமணி தரப்புக்கும், அன்பரசன் தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.வாக்குவாதம் முற்றியதால் இருதரப்பினரும் மோதிக் கொண்டனர். இதையெடுத்து, அந்தப் பகுதியில் இருந்த சிலர் இருதரப்பினரையும் தடுத்து சமரசம் செய்து வைத்து அங்கிருந்து அனுப்பி வைத்தனராம். இந்நிலையில், அன்பரசன் உள்ளிட்ட சிலர் சிறிது நேரத்தில் ராஜாமணியின் வீட்டுக்கு சென்றனராம்.