சேலத்தில் லஞ்சம் பெற்ற சிறப்பு ஆய்வாளர் கைது
சேலத்தில், குற்றவாளிகளை காவல்நிலைய பிணையில் விடுவதற்கு லஞ்சம் கேட்ட காவல்நிலைய சிறப்பு ஆய்வாளர் இன்று கைது செய்யப்பட்டார்.


சேலத்தில், குற்றவாளிகளை காவல்நிலைய பிணையில் விடுவதற்கு லஞ்சம் கேட்ட காவல்நிலைய சிறப்பு ஆய்வாளர் இன்று கைது செய்யப்பட்டார்.
சேலம் இரும்பாலை காவல்நிலைய சிறப்பு இன்ஸ்பெக்டராக இருப்பவர் கே. மணி.
கடந்த மாதம் 27ம் தேதி சித்தர் கோயில் சாலையில் இரண்டு இருசக்கர வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து நேரிட்டது. இந்த விபத்து குறித்து விபத்தை ஏற்படுத்திய சுவாமிநாதபுரத்தைச் சேர்ந்த மோகன், அருள்குமார் இருவர் மீதும் 29ம் தேதி எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டது. இந்த நிலையில், இவர்களை கைது செய்து, காவல்நிலைய பிணையில் விடுதலை செய்ய, சிறப்பு ஆய்வாளர் மணி ரூ.5 ஆயிரம் லஞ்சமாகக் கேட்டார்.
லஞ்சம் கொடுக்க விரும்பாத இருவரும், சேலம் லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி சந்திரமௌலிக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து, லஞ்ச ஒழிப்புத் துறையினர் அளித்த ரூ.3 ஆயிரம் பணத்தை, இருவரும், மணியிடம் கொடுத்தனர். அப்போது அங்கே மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத் துறையினர், மணியைக் கைது செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...