தற்போது சிதம்பரம் நகரில் குறிப்பாக தெற்குவீதி, கீழரதவீதி, எஸ்.பி.கோயில்தெரு, வேணுகோபால்பிள்ளைதெரு உள்ளிட்ட பகுதிகளில் பாதாள சாக்கடை உடைப்பெடுத்து சாலையில் ஓடுவதால் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் சுகாதார சீர்கேட்டையும் ஏற்படுத்தி வருகிறது. நகரில் பாதாள சாக்கடை நீர் உடைப்பெடுத்து ஓடுவதும், அதனை நகராட்சி நிர்வாகம் சீர் செய்வதுமாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஆனால் இதற்கு நிர்ந்திர தீர்வு காணப்படவில்லை. என மாவட்ட நிர்வாகம் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் புதிய பாதாள சாக்கடை விரிவாக்க திட்டத்தை செம்மையான முறையில் செயல்படுத்தி புதிய திட்ட அறிக்கையை தயாரித்து விரைந்து அத்திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுத்தால் சிதம்பரம் நகர மக்களும், சுற்றுலாப் பயணிகளும் சுகாதார சீர்கேட்டிலிருந்து காப்பாற்றப்படுவார்கள் என சமூக ஆர்வலரகள் தெரிவிக்கின்றனர்.