ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணி15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடி
/

மளிகைக் கடை ஊழியர் மர்மச் சாவு

தூத்துக்குடி மாவட்டம் பழங்குளம் கோயில் தெருவைச் சேர்ந்தவர் பவுல்ராஜ். இவரது மனைவி விக்டோரியா. இவர்களது மூத்த மகன் சாம்ராஜ் (23). இவர் சேலம் வின்சென்ட் பகுதியில் தங்கி, அருகேயுள்ள ஒரு மளிகைக்

Updated On :23 ஜூன் 2013, 1:02 pm

சேலம் அஸ்தம்பட்டி பகுதியில் மளிகைக் கடை ஊழியர் மர்மமான முறையில் உயிரிழந்தது குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

தூத்துக்குடி மாவட்டம் பழங்குளம் கோயில் தெருவைச் சேர்ந்தவர் பவுல்ராஜ். இவரது மனைவி விக்டோரியா. இவர்களது மூத்த மகன் சாம்ராஜ் (23). இவர் சேலம் வின்சென்ட் பகுதியில் தங்கி, அருகேயுள்ள ஒரு மளிகைக் கடையில் வேலை பார்த்து வந்தார்.

இந்த நிலையில் இன்று காலை வெகு நேரமாகியும் சாம்ராஜ், வேலைக்கு வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த கடை உரிமையாளர் அறைக்குச் சென்று பார்த்தபோது சாம்ராஜ், மர்மமான முறையில் படுக்கையில் உயிரிழந்து கிடப்பது தெரிய வந்தது.இது குறித்து அஸ்தம்பட்டி காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த காவல்துறையினர், சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சாம்ராஜ் எப்படி இறந்தார் என்பது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.