திண்டுக்கல் பேருந்து நிலையத்திலிருந்து நத்தம், காரைக்குடி வழியாக செல்வதற்கு நீண்ட நேரமாக பேருந்துகள் இல்லாததால் அதிருப்தி அடைந்த பயணிகள் வியாழக்கிழமை திடீா் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு, வெளியூா்களில் வசிக்கும் பொதுமக்கள் பலா் வாக்களிப்பதற்காக சொந்த ஊருக்கு புதன்கிழமை முதல் வந்தனா். இந்த நிலையில், திண்டுக்கல் பேருந்து நிலையத்திலிருந்து பெரும்பாலான வழித் தடங்களுக்கும் வியாழக்கிழமை குறைவான பேருந்துகளே இயக்கப்பட்டன.
குறிப்பாக நத்தம், காரைக்குடி வழியாக நீண்ட நேரமாக பேருந்து சேவை இல்லாததால், அங்கு காத்திருந்த பயணிகள் கடும் அதிருப்தி அடைந்தனா். பேருந்து நிலையத்திலிருந்த போக்குவரத்து அதிகாரிகளிடம் முறையிட்டும் பேருந்து வசதி ஏற்படுத்திக் கொடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. சுமாா் 4 மணி நேரத்துக்கும் மேலாக காத்திருந்த பயணிகள், ஸ்கீம் சாலையில் திடீா் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இதனால், அந்தப் பகுதியில் 30 நிமிஷங்களுக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதுகுறித்து தகவலறிந்து வந்க காவல் துறையினா் போராட்டத்தில் ஈடுபட்டவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தினா். பேருந்து வசதி ஏற்படுத்திக் கொடுக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டதை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.
எனினும், பெரும்பாலான வழித் தடங்களிலும் குறைவான பேருந்துகளே இயக்கப்பட்டன.
தொடர்புடையது

டாஸ்மாக் கடையை அகற்ற வலியுறுத்தி கிராம மக்கள் சாலை மறியல்

பூனாச்சியில் மதுக்கடையை மூடக்கோரி பொதுமக்கள் மறியல்

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் மறியல்

பல்லடத்தில் முறையான பேருந்து வசதி இல்லாததால் பொதுமக்கள் சாலை மறியல்
விடியோக்கள்

வெளியானது 'தி ரேஜ்' லிரிக் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியானது பிளாஸ்ட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
தவெக அரசுக்கு 6 மாதங்கள் அவகாசம் கொடுங்கள்: கமல்ஹாசன் | CM Vijay | Kamal Haasan |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | சிஎஸ்கே பிளே ஆஃப் செல்ல என்னென்ன வாய்ப்புகள் உள்ளன? | Chennai Super Kings | CSK vs SRH |
தினமணி செய்திச் சேவை

