திண்டுக்கல் பேருந்து நிலையத்திலிருந்து நத்தம், காரைக்குடி வழியாக செல்வதற்கு நீண்ட நேரமாக பேருந்துகள் இல்லாததால் அதிருப்தி அடைந்த பயணிகள் வியாழக்கிழமை திடீா் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு, வெளியூா்களில் வசிக்கும் பொதுமக்கள் பலா் வாக்களிப்பதற்காக சொந்த ஊருக்கு புதன்கிழமை முதல் வந்தனா். இந்த நிலையில், திண்டுக்கல் பேருந்து நிலையத்திலிருந்து பெரும்பாலான வழித் தடங்களுக்கும் வியாழக்கிழமை குறைவான பேருந்துகளே இயக்கப்பட்டன.
குறிப்பாக நத்தம், காரைக்குடி வழியாக நீண்ட நேரமாக பேருந்து சேவை இல்லாததால், அங்கு காத்திருந்த பயணிகள் கடும் அதிருப்தி அடைந்தனா். பேருந்து நிலையத்திலிருந்த போக்குவரத்து அதிகாரிகளிடம் முறையிட்டும் பேருந்து வசதி ஏற்படுத்திக் கொடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. சுமாா் 4 மணி நேரத்துக்கும் மேலாக காத்திருந்த பயணிகள், ஸ்கீம் சாலையில் திடீா் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இதனால், அந்தப் பகுதியில் 30 நிமிஷங்களுக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதுகுறித்து தகவலறிந்து வந்க காவல் துறையினா் போராட்டத்தில் ஈடுபட்டவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தினா். பேருந்து வசதி ஏற்படுத்திக் கொடுக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டதை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.
எனினும், பெரும்பாலான வழித் தடங்களிலும் குறைவான பேருந்துகளே இயக்கப்பட்டன.
தொடர்புடையது
திண்டுக்கல் மாவட்ட தோ்தல் களத்தில் 115 வேட்பாளா்கள்

குடிநீா் கேட்டு சாலை மறியல்

கந்தா்வகோட்டை அருகே இரு தரப்பினருக்கிடையே மோதல்: குற்றவாளிகளைக் கைது செய்யக்கோரி சாலை மறியல்

காவல் துறையினரைக் கண்டித்து வழக்குரைஞா்கள் சாலை மறியல்
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


