கடலூர் நகர்மன்றக் கூட்டம் உறுப்பினர்கள் இன்றி ஒத்திவைப்பு

கடலூர் நகர்மன்றக் கூட்டம் போதிய உறுப்பினர்கள் வராததால் ஒத்திவைக்கப்பட்டது.
Updated on
1 min read

கடலூர் நகர்மன்றக் கூட்டம் போதிய உறுப்பினர்கள் வராததால் ஒத்திவைக்கப்பட்டது.

இன்று காலை கடலூர் நகர்மன்றக் கூட்டம் துவங்கியது. கடந்த சில நாட்களாகவே நகர்மன்றத் தலைவர், துணைத்தலைவர் ஆகிய இருவருக்கும் இடையிலான தகராறு குழு மோதலாக உருவெடுத்துள்ளது. இருவருமே அதிமுகவைச் சேர்ந்தவர்கள்தான் என்ற போதிலும், குழு மனப்பான்மையால் இருபிரிவாகப் பிரிந்துள்ள உறுப்பினர்கள் கூட்டத்தை இன்று புறக்கணித்தனர்.

மொத்தமுள்ள 45 உறுப்பினர்களில் 5 பேர் மட்டுமே மன்றக் கூட்டத்துக்கு வந்தனர். அவர்களில் 3 பேர் அதிமுகவினர். இதனால், கடலூர் நகர்மன்றக் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com