தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!கர்நாடகம்: கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிவதற்கான தடை நீக்கம்6 சர்வதேச விமான சேவைகள் தற்காலிகமாக ரத்து - ஏர் இந்தியாகண்களிலும் காதுகளிலும் பொறாமைப் புகை! திமுகவை விமர்சித்த விஜய்!நீட் தேர்வு தேவையில்லை; ரத்து செய்க: முதல்வர் ஜோசப் விஜய்அதிமுகவுடன் கூட்டணியமைக்க தவெக தயாராக இருந்தது: சி.வி. சண்முகம்மே 16-ல் தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை! வெற்றியின் வீச்சு கொளத்தூரில் பார்த்தும்கூடவா புரியவில்லை? - முதல்வர் விஜய்திமுகவுடன் கூட்டணி; கனவில்கூட வரக்கூடாது: சசிகலா
/

ஈரானில் இருந்து நாடு திரும்பிய 2,300 இந்தியர்கள்! - மத்திய அரசு அறிவிப்பு!

ஈரானில் இருந்து இதுவரை 2,300 இந்தியர்கள் தாயகம் திரும்பியது குறித்து...

News image

நாடு திரும்பிய இந்தியர்கள்... - கோப்புப் படம்

Updated On :17 ஏப்ரல் 2026, 6:20 pm IST

ஈரானில் இருந்து 2,300-க்கும் அதிகமான இந்தியர்களை பத்திரமாகத் தாயகம் அழைத்து வந்துள்ளதாக, மத்திய வெளியுறவு அமைச்சகம் அறிவித்துள்ளது.

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிய படைகளுக்கும், ஈரானுக்கும் இடையில் கடந்த பிப். 28 அன்று போர் தொடங்கியது. இதையடுத்து, ஈரானில் சிக்கிய இந்தியர்கள்nஅஜர்பைஜான் மற்றும் ஆர்மீனியா வழியாகவும், இஸ்ரேலில் சிக்கியவர்கள் எகிப்து மற்றும் ஜோர்டான் ஆகிய நாடுகளின் வழியாகவும் தாயகம் திரும்பியுள்ளனர்.

இந்த நிலையில், போர் தொடங்கியது முதல் ஈரானில் இருந்து இந்திய மாணவர்கள், மீனவர்கள் உள்பட 2,361 பேர் பத்திரமாக அழைத்து வரப்பட்டதாக, மத்திய வெளியுறவு அமைச்சகம் வெள்ளிக்கிழமை (ஏப். 17) அன்று அறிவித்துள்ளது.

இதுகுறித்து, மத்திய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறுகையில்,

“இதுவரை ஈரானில் இருந்து ஆர்மீனியா வழியாக 2,060 இந்தியர்களும், அஜர்பைஜான் வழியாக 301 இந்தியர்களும் நாடு திரும்பியுள்ளனர்.

மேலும், 1,041 பேர் மாணவர்கள் உள்பட 2,361 மீட்கப்பட்டுள்ளனர். இத்துடன், வங்கதேசம், இலங்கை மற்றும் கயானா ஆகிய வெளிநாடுகளைச் சேர்ந்த தலா ஒருவரும் ஈரானில் இருந்து அழைத்து வரப்பட்டுள்ளனர்” எனத் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, ஈரான் மற்றும் அமெரிக்கா இடையில் 2 வாரங்களுக்குப் போர்நிறுத்தம் அமலுக்கு வருவதாக, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கடந்த ஏப். 7 அன்று அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

Summary

Ministry of External Affairs has announced that it has safely brought back more than 2,300 Indians from Iran.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.