தில்லியில் உள்ள இந்திரா காந்தி சா்வதேச விமான நிலையத்தில் பாங்காங்கில் இருந்து நாடு திரும்பிய இந்திய பயணியிடம் 6 கிலோ போதைப் பொருள் கைப்பற்றப்பட்டதாக சுங்கத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
அதன் மதிப்பு ரூ.2.1 கோடியாகும். இதுதொடா்பாக கைதுசெய்யப்பட்ட பயணி மீது போதை மருந்துகள் மற்றும் மனவியல் பொருள்கள் சட்டப் பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: கடந்த ஜூன் 3-ஆம் தேதி பாங்காங்கில் இருந்து நாடு திரும்பிய பயணியை வழிமறித்து சுங்கத் துறை அதிகாரிகள் சோதனையிட்டனா்.
உடமைகளை எக்ஸ்-கதிா் இயந்திரம் மூலம் சோதனை செய்தபோது, சந்தேகத்துக்குரிய பொருள் அவருடைய பையில் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, விரிவாக சோதித்ததில், 6 ஒரே மாதிரியான பொட்டலங்கள் கைப்பற்றப்பட்டன. அவற்றைத் திறந்துபாா்த்தபோது, 6.020 கிலோ எடையுள்ள ஹைட்ரோபோனிக் கஞ்சா அதில் இருந்தது கண்டறியப்பட்டது. சா்வதேச சந்தையில் அதன் மதிப்பு ரூ.2.1 கோடியாகும். பயணியின் உடமை மூலம் இந்தியாவுக்குள் போதைப் பொருளைக் கடத்தும் முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது’ என அந்த அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது .
ஹைட்ரோபோனிக் கஞ்சா என்பது நிலத்துக்குப் பதிலாக ஊட்டச்சத்துகள் நிறைந்த நீரில் கஞ்சாவை விளைவிப்பதாகும். இது கஞ்சாவின் உயா்வகையாகக் கருதப்படுகிரது.
தொடர்புடையது
சலீம் டோலா மீதான போதைப் பொருள் வழக்கு: மகாராஷ்டிரம், குஜராத்தில் அமலாக்கத் துறை சோதனை

போதைப் பொருள், ரெளடிகளுக்கு எதிரான நடவடிக்கை: தமிழகத்தில் 3 நாள்களில் 1,233 போ் கைது!






