காமன்வெல்த் பளுதூக்குதலில் வெண்கலம் வென்றார் பிந்தியாராணி தேவி!நாமக்கல் கவிஞர் மாளிகைக்கு மாறுகிறது முதல்வர் அலுவலகம்! அதிகாரப்பூர்வ அறிவிப்பு!சிவகாசியில் சட்டவிரோத பட்டாசு ஆலைகள் செயல்படுகின்றனவா? ஆய்வு செய்ய முதல்வர் உத்தரவுசென்னை தலைமைச் செயலகம் முன்பு விவசாயிகள் போராட்டம்கரூர் அரசுப் பணி ஆணை ரத்து: உச்சநீதிமன்றம் செல்ல தவெக திட்டம்!போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கைது; விடுவிக்கவில்லை என்றால் மீண்டும் போராட்டம் - சிஜேபிசென்னை கோயம்பேடு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் முதல்வர் சி. ஜோசப் விஜய் ஆய்வுகரூரில் முதல்வர் விஜய் வழங்கிய அரசுப் பணி ஆணைகள் ரத்து! - உயர் நீதிமன்றம்
/

தில்லி விமான நிலையத்தில் ரூ. 2.1 கோடி மதிப்பிலான போதைப் பொருள் பறிமுதல்

தில்லி விமான நிலையத்தில் ரூ. 2.1 கோடி மதிப்பிலான போதைப் பொருள் பறிமுதல்

News image

தில்லி விமான நிலையம் - ANI

Updated On :7 ஜூன் 2026, 1:24 am IST

தில்லியில் உள்ள இந்திரா காந்தி சா்வதேச விமான நிலையத்தில் பாங்காங்கில் இருந்து நாடு திரும்பிய இந்திய பயணியிடம் 6 கிலோ போதைப் பொருள் கைப்பற்றப்பட்டதாக சுங்கத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

அதன் மதிப்பு ரூ.2.1 கோடியாகும். இதுதொடா்பாக கைதுசெய்யப்பட்ட பயணி மீது போதை மருந்துகள் மற்றும் மனவியல் பொருள்கள் சட்டப் பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: கடந்த ஜூன் 3-ஆம் தேதி பாங்காங்கில் இருந்து நாடு திரும்பிய பயணியை வழிமறித்து சுங்கத் துறை அதிகாரிகள் சோதனையிட்டனா்.

உடமைகளை எக்ஸ்-கதிா் இயந்திரம் மூலம் சோதனை செய்தபோது, சந்தேகத்துக்குரிய பொருள் அவருடைய பையில் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, விரிவாக சோதித்ததில், 6 ஒரே மாதிரியான பொட்டலங்கள் கைப்பற்றப்பட்டன. அவற்றைத் திறந்துபாா்த்தபோது, 6.020 கிலோ எடையுள்ள ஹைட்ரோபோனிக் கஞ்சா அதில் இருந்தது கண்டறியப்பட்டது. சா்வதேச சந்தையில் அதன் மதிப்பு ரூ.2.1 கோடியாகும். பயணியின் உடமை மூலம் இந்தியாவுக்குள் போதைப் பொருளைக் கடத்தும் முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது’ என அந்த அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது .

ஹைட்ரோபோனிக் கஞ்சா என்பது நிலத்துக்குப் பதிலாக ஊட்டச்சத்துகள் நிறைந்த நீரில் கஞ்சாவை விளைவிப்பதாகும். இது கஞ்சாவின் உயா்வகையாகக் கருதப்படுகிரது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.