மீட்சிக்குப் பிறகு சென்செக்ஸ், நிஃப்டி மாற்றமின்றி நிறைவு!!ஜூனில் சில்லறை விலை பணவீக்கம் 4.38 சதவீதமாக உயர்வு!டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 27 காசுகள் சரிந்து ரூ. 95.65 ஆக நிறைவு!தில்லியில் ஞானபீட விருது பெற்றார் வைரமுத்து!முட்டை கொள்முதல் விலை ரூ. 6.70-ஆக நிர்ணயம்.லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநர் ஏ. அருண், சென்னை காவலர் பயிற்சி மைய இயக்குநராகப் பணியிட மாற்றம்பட்ஜெட்: ஜூலை 16 -ல் தமிழக அமைச்சரவை கூட்டம்!தமிழ்நாடு பாடநூல், கல்வியியல் கழகத்தின் தலைவராக லயோலா மணி நியமனம்!பெரம்பூர் எம்எல்ஏ அலுவலகத்தை திறந்து வைத்த முதல்வர் விஜய்!மேற்கு வங்க இடைத்தேர்தல்: பாஜக வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல்! முதல்வர் விஜய்யுடன் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழும தலைவர் மனோஜ் குமார் சொந்தாலியா சந்திப்பு! திமுக முன்னாள் அமைச்சர் தா.மோ. அன்பரசன் மீது நில அபகரிப்பு வழக்குசென்னையில் தரையிறங்கிய விமானம் மீது பறவை மோதியது!எழுத்தாளர் பூமணி உடலுக்கு அரசு மரியாதை: முதல்வர் விஜய் அறிவிப்பு! 7,700 பக்தர்கள் அடங்கிய 12-வது குழு அமர்நாத் புறப்பட்டது!
/

தில்லி விமான நிலையத்தில் ரூ. 2.1 கோடி மதிப்பிலான போதைப் பொருள் பறிமுதல்

தில்லி விமான நிலையத்தில் ரூ. 2.1 கோடி மதிப்பிலான போதைப் பொருள் பறிமுதல்

News image

தில்லி விமான நிலையம் - ANI

Updated On :7 ஜூன் 2026, 2:49 am IST

தில்லியில் உள்ள இந்திரா காந்தி சா்வதேச விமான நிலையத்தில் பாங்காங்கில் இருந்து நாடு திரும்பிய இந்திய பயணியிடம் 6 கிலோ போதைப் பொருள் கைப்பற்றப்பட்டதாக சுங்கத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

அதன் மதிப்பு ரூ.2.1 கோடியாகும். இதுதொடா்பாக கைதுசெய்யப்பட்ட பயணி மீது போதை மருந்துகள் மற்றும் மனவியல் பொருள்கள் சட்டப் பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: கடந்த ஜூன் 3-ஆம் தேதி பாங்காங்கில் இருந்து நாடு திரும்பிய பயணியை வழிமறித்து சுங்கத் துறை அதிகாரிகள் சோதனையிட்டனா்.

உடமைகளை எக்ஸ்-கதிா் இயந்திரம் மூலம் சோதனை செய்தபோது, சந்தேகத்துக்குரிய பொருள் அவருடைய பையில் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, விரிவாக சோதித்ததில், 6 ஒரே மாதிரியான பொட்டலங்கள் கைப்பற்றப்பட்டன. அவற்றைத் திறந்துபாா்த்தபோது, 6.020 கிலோ எடையுள்ள ஹைட்ரோபோனிக் கஞ்சா அதில் இருந்தது கண்டறியப்பட்டது. சா்வதேச சந்தையில் அதன் மதிப்பு ரூ.2.1 கோடியாகும். பயணியின் உடமை மூலம் இந்தியாவுக்குள் போதைப் பொருளைக் கடத்தும் முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது’ என அந்த அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது .

ஹைட்ரோபோனிக் கஞ்சா என்பது நிலத்துக்குப் பதிலாக ஊட்டச்சத்துகள் நிறைந்த நீரில் கஞ்சாவை விளைவிப்பதாகும். இது கஞ்சாவின் உயா்வகையாகக் கருதப்படுகிரது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.