எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

சேரன்மகாதேவியில் வீட்டின் பூட்டை உடைத்து திருட முயற்சி

சேரன்மகாதேவி எம்.கே.டி. தெருவை சேர்ந்த கூலித் தொழிலாளி சுப்பிரமணியன். இவர் வீட்டை பூட்டி விட்டு வெளியூர் சென்றிருந்தாராம். மர்ம நபர்கள் சுப்பிரமணியன் வீட்டு பூட்டை உடை

News image
Updated On :7 மார்ச் 2013, 5:19 pm

ஷேக் அப்துல்காதர்

சேரன்மகாதேவி எம்.கே.டி. தெருவை சேர்ந்த கூலித் தொழிலாளி சுப்பிரமணியன். இவர் வீட்டை பூட்டி விட்டு வெளியூர் சென்றிருந்தாராம். மர்ம நபர்கள் சுப்பிரமணியன் வீட்டு பூட்டை உடைத்து உள்ளே சென்று அங்கு திருட முயற்சி செய்துள்ளனர். வீட்டில் விலை உயர்ந்த தங்கம் உள்ளிட்ட  பொருட்கள் எதுவும் இல்லாததால் மர்ம நபர்கள் சென்று விட்டனர்.

சேரன்மகாதேவி அருகே செல்விபுரத்தில் தனியார் கல்லூரி ஊழியர் வீடு, அருகில் மற்றொரு வீட்டுக்கு சென்ற மர்ம நபர்கள் வீட்டில் இருந்த அழைப்பு மணியை தொடர்ந்து அடித்தனராம். சேரன்மகாதேவியில் ஒரே நாள் இரவில் அடுத்தடுத்த வீடுகளில் மர்ம நபர்கள் பூட்டை உடைத்து திருடிய சம்பவம், அழைப்பு மணியை அடித்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.