வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

காரைக்கால் மீனவர்கள் 4 பேர் மீது இலங்கைக் கடற்படை கண்மூடித்தனமான தாக்குதல்

காரைக்காலில், காரைக்கால் மேடு பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் காசிநாதன், சித்ரவேல், சந்திரகுமார், முருகையன், பிரகாஷ்

News image
Updated On :8 மார்ச் 2013, 4:31 am

செல்வ முத்துகுமாரசாமி

காரைக்காலில், காரைக்கால் மேடு பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் காசிநாதன், சித்ரவேல், சந்திரகுமார், முருகையன், பிரகாஷ் ஆகிய 5 பேரும் காரைக்காலில் இருந்து  மீன்பிடிக்க கடலுக்குச் சென்றுள்ளனர். இவர்கள் கோடியக்கரையிலிருந்து 5 பாகம் கடல் தொலைவில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, அங்கே வந்த இலங்கைக் கடற்படையினர், மீனவர்களின் கண்களில் மிளகாய்ப் பொடி தூவி, அவர்களின் கைகளைக் கட்டி, அவர்களை கட்டையால் அடித்து, பின்னர் துப்பாக்கியால் சுட்டுவிடுவேன் என்று மிரட்டிச் சென்றனராம். படுகாயங்களுடன் இன்று அதிகாலை அவர்கள் காரைக்கால்  கரை திரும்பினர். அவர்களில் பிரகாஷ் தவிர்த்த மற்ற 4 மீனவர்களும், காரைக்கால் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.