விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் நெடுஞ்சாலை ரோந்து வாகனம் பாலத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்த சிறப்பு சார்பு ஆய்வாளர் கணேசன் பலத்த காயம் அடைந்தார்.
நெடுஞ்சாலையில் ஏற்படும் விபத்துக்களைத் தடுக்கவும், விபத்தில் காயமுற்றவர்களை உடனடியாக மீட்பதற்காகவும் தமிழக அரசு நெடுஞ்சாலை ரோந்து காவல் படையை அமைத்துள்ளது. இவர்களுக்கு அதற்காக தற்போது புதிய வாகனம் வழங்கப்பட்டுள்ளது.
ஸ்ரீவில்லிபுத்தூர்-ராஜபாளையம் தேசிய நெடுஞ்சாலையில் ரோந்துப் பணியில் செவ்வாய்கிழமை அதிகாலை இந்த வாகனம் ஈடுபட்டிருந்தது. அழகாபுரிக்கும்-கிருஷ்ணன்கோவிலுக்கும் இடையே வடுகபட்டி விலக்கு அருகே சாலை ஓரம் உள்ள பாலத்தில் ரோந்து வாகனம் மோதி பாலத்தின் மீது ஏறி பள்ளத்தில் சாய்ந்தது.
இதில் அதில் பணியில் இருந்து சிறப்பு சார்பு ஆய்வாளர் கணேசன் பலத்த காயம் அடைந்தார். வாகனமும் பலத்த சேதமுற்றது. இது குறித்த புகாரின் வாகனத்தை ஓட்டி வந்த, மாற்றுப் பணியில் இருந்த போக்குவரத்துக் காவலர் முனீஸ்வரன் மீது நத்தம்பட்டி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

முதல்வரை மாற்றும் விவகாரம்: கட்சி முடிவுக்கு கட்டுப்படுவோம்- டி.கே.சுரேஷ்

திருச்செந்தூர், சீரடியைத் தொடர்ந்து வேளாங்கண்ணி, நாகூர் தர்கா செல்லும் விஜய்?!
விஜய்யுடன் சீரடி கோவிலுக்குச் சென்ற 2 பெண்கள் யார்?

நாட்டில் முதல்முறையாக ஏஐ அடிப்படையிலான பன்மொழி சேவைகள்: பெங்களூரு காவல்துறை அறிமுகம்!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

