விருதுநகரில் மாவட்ட கருவூலம் மற்றும் அனைத்து சார்நிலைக் கருவூலங்களிலும் ஓய்வூதியம் பெறுவோர் நிகழாண்டிற்கான நேர்காணல் ஏப்-1ம் தேதி தொடங்கி வங்கிகள் வாரியாக குறிப்பிட்டுள்ள நாள்களில் நடைபெற இருக்கிறது.
இது குறித்து மாவட்ட ஆட்சியர் டி.என்.ஹரிஹரன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு விவரம்: இதில், அந்தந்த பகுதிகளில் உள்ள சார்நிலைக் கருவூலங்களில் ஓய்வூதிய புத்தகம் மற்றும் தேசிய வங்கிகளில் செல்லேடு புத்தகம் உள்ளிட்ட விவரங்களுடன் நேரில் ஆஜராக வேண்டும்.
மேலும், பாரத ஸ்டேட் வங்கியில் கணக்கு வைத்திருப்போர் ஏப்.1ம் தேதி முதல் தொடர்ந்து 15-ம் தேதி வரையிலும், இந்தியன் வங்கியில் வைத்திருப்போர் 16-ம் தேதி முதல் 18-ம் தேதி வரையும், கனரா வங்கியில் உள்ளவர்கள் 19-ம் தேதி, முதல் 23ம் தேதி வரையும், இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் வைத்திருப்போர் 24-ம் தேதி முதல் 26-ம் தேதி வரையிலும், இதர வங்கிகளில் வைத்திருப்போர் 27-ம் தேதி முதல் 30-ம் தேதி வரையிலும் நேர்காணல் நடைபெற இருக்கிறது.
அதேபோல், மே-1ம் தேதி முதல் 31-ம் தேதி வரையிலும் அனைத்து வங்களிலும் கணக்கு வைத்திருப்போர் மற்றும் விடுபட்டோர் ஆகியோர் மாவட்டம் மற்றும் சார்நிலை கருவூலங்களில் ஓய்வூதியர்கள் அனைவரும் ஓய்வூதியம் சம்பந்தமான அனைத்து ஆவணங்களுடன் நேரில் ஆஜராகி சரிபார்த்துக் கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் டி.என்.ஹரிஹரன் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
கள்ளச்சந்தையில் மதுபாட்டில் விற்ற பெண் கைது

நாளை பிரசாரம் நிறைவு: வேட்பாளா்கள் தீவிர வாக்கு சேகரிப்பு

முதல்முறையாக ஆழ்கடலில் மீன்பிடிப்புக்கு சென்று திரும்பிய படகுகள்

பிஏபி வாய்க்காலில் இருந்து அரசுப் பேருந்து ஓட்டுநா் சடலம் மீட்பு
வீடியோக்கள்

யார் தோற்பது என்ற போட்டியில் வென்ற சிஎஸ்கே! | Chennai Super Kings | Ayush Mhatre |
தினமணி செய்திச் சேவை
பிரகாஷ்ராஜ் அரசியலில் என்ன செய்துவிட்டார்? குஷ்பு பேட்டி | DMK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

பெண்களுக்கு எதிரான எண்ணம்! திமுக, காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா | BJP
தினமணி செய்திச் சேவை

"சென்னை சூப்பர் - 6" திமுகவின் அறிவிப்புகள் என்ன? எழிலன் நாகநாதன் விளக்கம்!
இணையதளச் செய்திப் பிரிவு

