92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

சிதம்பரம் அருகே மீன்வியாபாரி வீட்டில் 8 பவுன் நகைகள் திருட்டு

சிதம்பரம் அருகே புவனகிரியில் வீட்டின் பின்புறக்கதவை உடைத்து மர்மஆசாமிகள் உள்ளே புகுந்து 8 பவுன் நகைகளை திருடிச் சென்றுள்ளனர்.

News image
Updated On :30 மார்ச் 2013, 8:08 am

ஜி.சுந்தரராஜன்

சிதம்பரம் அருகே புவனகிரியில் வீட்டின் பின்புறக்கதவை உடைத்து மர்மஆசாமிகள் உள்ளே புகுந்து 8 பவுன் நகைகளை திருடிச் சென்றுள்ளனர்.

சிதம்பரம் அருகே உள்ள கீழ்புவனகிரி பருவதராஜ குலத்தெருவில் வசிப்பவர் மணிகண்டன் (47). மீன் வியாபாரியான இவர் கடந்த மார்ச் 27-ம் தேதி வீட்டை பூட்டிக்கொண்டு புதுச்சேரியில் உள்ள தனது மைத்துனர் சாவிற்கு சென்றுள்ளார். வெள்ளிக்கிழமை இரவு வீடு திரும்பிய போது வீட்டின் பின்புறக்கதவை உடைத்து மர்ம ஆசாமிகள் வீட்டிற்குள் புகுந்து பீரோவிலிருந்து 8 பவுன் நகைகளை திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து புகாரி்ன் பேரில் புவனகிரி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.