92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

சிதம்பரம் பல்கலைக்கழக முன்னாள் பேராசிரியர் வீட்டில் திருட்டு!

சிதம்பரம் அண்ணாமலைநகர் அருகே உள்ள மாரியப்பாநகரில் ஓய்வு பெற்ற பேராசிரியர் வீட்டின் பூட்டை உடைத்து மர்மஆசாமிகள் உள்ளே புகுந்து ரூ.34 ஆயிரம் மதிப்புள்ள வெள்ளிப் பொருள்கள் மற்றும் ஏடிஎம் கார்டுகளை திருடிச் சென்றுள்ளனர்.

News image
Updated On :1 மே 2013, 5:55 am

ஜி.சுந்தரராஜன்

சிதம்பரம் அண்ணாமலைநகர் அருகே உள்ள மாரியப்பாநகரில் ஓய்வு பெற்ற பேராசிரியர் வீட்டின் பூட்டை உடைத்து மர்மஆசாமிகள் உள்ளே புகுந்து ரூ.34 ஆயிரம் மதிப்புள்ள வெள்ளிப் பொருள்கள் மற்றும் ஏடிஎம் கார்டுகளை திருடிச் சென்றுள்ளனர்.

சிதம்பரம் மாரியப்பாநகரில் வசிப்பவர் தீனா. அண்ணாமலைப் பல்கலைக்கழக ஓய்வுபெற்ற பேராசிரியரான இவர் கடந்த ஜனவரி மாதம் வீட்டை பூட்டிக்கொண்டு அமெரிக்கா சென்றார். ஏப்.29-ந் தேதி இந்தியா திரும்பிய பேராசிரியர் தீனா செவ்வாய்க்கிழமை வீடு திரும்பிய போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு பீரேவிலிருந்த 34 ஆயிரம் மதிப்புள்ள வெள்ளிப் பொருள்கள் மற்றும் ஏடிஎம் கார்டுகள் திருடு போனது தெரியவந்தது. இதுகுறித்து தீனா அளித்த புகாரின் பேரில் அண்ணாமலைநகர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.