லக்னௌவை வீழ்த்தி பஞ்சாப் கிங்ஸ் இமாலய வெற்றி!அதிமுக யாருக்கும் அடிமையில்லை : ராகுலுக்கு இபிஎஸ் பதில்விருதுநகர் பட்டாசு ஆலை வெடி விபத்து பலி 23-ஆக உயர்வுதிமுக ஆட்சியில் பட்டாசு ஆலை விபத்துகள் தொடர்கதை: இபிஎஸ்விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து : உரிமையாளரைப் பிடிக்க 4 தனிப்படைகள்!நேஷனல் ஹெரால்டு விவகாரம்: சோனியா, ராகுலுக்கு எதிரான அமலாக்கத்துறை மனு நாளை விசாரணை!மக்கள் பிரச்னைகளுக்கு செவிசாய்க்காதவர் மோடி : மல்லிகார்ஜுன கார்கே பிரசாரம்தமிழ்நாட்டின் வளர்ச்சியை பாஜக தடுக்கிறது: முதல்வர் ஸ்டாலின் பெண்களுக்கு துரோகம் செய்தது காங்கிரஸ் - திரிணமூல்: தேர்தலில் பாடம் புகட்டப்படும் - மோடிதிருச்சி தேவாலயத்தில் மண்டியிட்டு பிரார்த்தனை செய்த விஜய்!
/

குடிபோதையில் மனைவியை அரிவாளல் வெட்டிய கணவன் கைது 

திருச்சுழி அருகே குடிபோதையில் மனைவியை அரிவளால் வெட்டிய கணவரை போலீஸார் கைது செய்தனர்.

Updated On :2 மே 2013, 11:53 am

திருச்சுழி அருகே குடிபோதையில் மனைவியை அரிவளால் வெட்டிய கணவரை போலீஸார் கைது செய்தனர்.

இது தொடர்பாக போலீஸார் தரப்பில் கூறியதாவது: விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே அம்மன்பட்டியைச் சேர்ந்தவர் மாரிமுத்து என்பவரின் மனைவி பூமயில்(28). இவரது கணவர் புதன்கிழமை இரவு அதிகமாக குடித்து விட்டு தெருவில் கண்டபடி பேசி தகராறு செய்துள்ளார். இது தொடர்பாக அத்தெருப்பகுதியைச் சேர்ந்தவர்கள் பூமயிலிடம் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, குடிபோதையில் இருந்த கணவரை மனைவி தட்டிக் கேட்டார். இதனால், ஆத்திரம் அடைந்த மாரிமுத்து அருகில் வைத்திருந்த அரிவாளால் மனைவியை பல்வேறு இடங்களில் வெட்டியதால் படுகாயம் அடைந்தார்.

இதனால், படுகாயம் அடைந்த பூமயிலுக்கு கமுதி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளித்தனர். அதையடுத்து மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகி்சசை பெற்று வருகிறார். இது குறித்து பூமயில் திருச்சுழி காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்து கணவர் மாரிமுத்துவை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.