லக்னௌவை வீழ்த்தி பஞ்சாப் கிங்ஸ் இமாலய வெற்றி!அதிமுக யாருக்கும் அடிமையில்லை : ராகுலுக்கு இபிஎஸ் பதில்விருதுநகர் பட்டாசு ஆலை வெடி விபத்து பலி 23-ஆக உயர்வுதிமுக ஆட்சியில் பட்டாசு ஆலை விபத்துகள் தொடர்கதை: இபிஎஸ்விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து : உரிமையாளரைப் பிடிக்க 4 தனிப்படைகள்!நேஷனல் ஹெரால்டு விவகாரம்: சோனியா, ராகுலுக்கு எதிரான அமலாக்கத்துறை மனு நாளை விசாரணை!மக்கள் பிரச்னைகளுக்கு செவிசாய்க்காதவர் மோடி : மல்லிகார்ஜுன கார்கே பிரசாரம்தமிழ்நாட்டின் வளர்ச்சியை பாஜக தடுக்கிறது: முதல்வர் ஸ்டாலின் பெண்களுக்கு துரோகம் செய்தது காங்கிரஸ் - திரிணமூல்: தேர்தலில் பாடம் புகட்டப்படும் - மோடிதிருச்சி தேவாலயத்தில் மண்டியிட்டு பிரார்த்தனை செய்த விஜய்!
/

விருதுநகர் அருகே குடும்ப பிரச்னையால் முதியவர் விஷம் குடித்து சாவு

விருதுநகர் அருகே குடும்ப பிரச்னையால் முதியவர் விஷ மருந்து அருந்தி வியாழக்கிழமை உயிரிழந்தார்.

Updated On :2 மே 2013, 11:54 am

விருதுநகர் அருகே குடும்ப பிரச்னையால் முதியவர் விஷ மருந்து அருந்தி வியாழக்கிழமை உயிரிழந்தார்.

விருதுநகர் அருகே தாதம்பட்டியைச் சேர்ந்தவர் கருப்பணன்(60). கடந்த சில மாதங்களுக்கு முன்பு குடும்பத்தில் முக்கிய செலவு மேற்கொள்வதற்காக மனைவி நகையை அடகு வைத்துள்ளார்.

இந்த நகையை திருப்பிர தர கேட்டதால், இவர்களுக்கு இடையே பிரச்னை ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் மனம் உடைந்த கருப்பணன், அதிகாலையில் மனைவி வெளியே சென்றிருந்த நேரத்தில் விவசாய பயிர்களுக்கு வாங்கி வைத்திருந்த விஷமருந்தை குடித்து உயிரிழந்தார். இது குறித்து அவரது உறவினர் மாரியப்பன் வச்சக்காரப்பட்டி காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் வழக்கு பதிவு செய்து போலீஸார்  விசாரணை செய்து வருகிறார்கள்.    

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.