சிதம்பரம் அருகே உள்ள கீரப்பாளையம் பெட்ரோல் பங்க் அருகே வெள்ளிக்கிழமை காலை 12 மணிக்கு சிதம்பரம்-சென்னை அரசு போக்குவரத்துக்கழக பஸ்ஸின் பின்புறக் கண்ணாடி மர்ம நபர்களால் கல்வீசி தாக்கி உடைக்கப்பட்டது. மற்றொரு சம்பவமான சிதம்பரம் அருகே பழைய கொள்ளிடம் பாலம் அருகே வியாழக்கிழமை இரவு சென்னை-கும்பகோணம் சென்ற அரசு பஸ்ஸின் கண்ணாடி மர்ம நபர்களால் கல்வீசி தாக்கி உடைக்கப்பட்டது. இச்சம்பவத்தில் பஸ் டிரைவர் ராஜதுரை காயமுற்று சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் சிதம்பரம் அருகே விபீஷணபுரம் எனுமிடத்தில் அளக்குடி-சிதம்பரம் சென்ற டவுன் பஸ்ஸின் கண்ணாடியும், கடவாச்சேரி எனுமிடத்தில் சிதம்பரம்-மகேந்திரபள்ளம் செல்லும் அரசு பஸ்ஸின் கண்ணாடியும் மர்ம நபர்களால் கல்வீசி தாக்கி உடைக்கப்பட்டது. இதுகுறித்து அண்ணாமலைநகர் மற்றும் புவனகிரி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.