சென்னை வியாசார்பாடியில் மின்வாரிய அலுவலகம் சூறையாடப்பட்டதையடுத்து 2 பேரை போலீஸார் கைது செய்தனர்.
வியாசர்பாடி, சர்மாநகர், சாஸ்திரி நகர் பகுதியில் நேற்று(சனிக்கிழமை) காலை 9 மணியளவில் மின்தடை ஏற்பட்டது. இந்த மின்தடை இரவு வரை நீடித்தது. இது குறித்து அப்பகுதி மக்கள் மின்வாரிய அதிகாரிகளிடம் கேட்டபோது சரியான பதில் கூறவில்லை. இதனால் ஆத்திரமடைந்த பெண்கள் உள்பட 50-க்கும் மேற்பட்டோர் நேற்று எருக்கஞ்சேரி நெடுஞ்சாலையில் உள்ள மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு மறியலில் ஈடுபட்டனர். அப்போது சிலர் மின் வாரிய அலுவலகத்துக்குள் புகுந்து கண்ணாடி, ஜன்னல், மேஜைகளை நொறுக்கி சூரையாடினர். இது குறித்த தகவலறிந்த போலீஸார் பொது மநக்களை சமாதானம் செய்தனர். மேலும் மின் விநியோகமும் வழங்கப்பட்டது.
ஆனால் மின் வாரிய அலுவலகம் சூறையாடப்பட்டது குறித்து அவ்வலுவகத்தின் உதவி பொறியாளர் ராமையா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீஸார் சாஸ்திரி நகரை சேர்ந்த பூமிநாதன், பாலனை கைது செய்தனர். அவர்கள் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: நாவறட்சி தணிய...!

பென்ஸ் படத்தில் இணைந்த ரவி மோகன்!
... புள்ளிகள்...

குடத்திற்குள் சிக்கிக்கொண்ட நாய்! போராடி மீட்ட உரிமையாளர்! | Thanjavur
விடியோக்கள்

”தில்லி பயணத்தில் வெளிப்படை இல்லை?” | அமைச்சர் நிர்மல் குமார் பதில் | TVK

திருக்கணிதப்படி குருபெயர்ச்சி பலன்கள்! June 1 நள்ளிரவு 2 மணி முதல் | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?


