புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

சிதம்பரம் கோயிலுக்கு வந்த கேரளா ஆசிரியையிடம் 8 பவுன் செயின் பறிப்பு

சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலுக்கு சுற்றுலா வந்த கேரளா மாநிலத்தைச் சேர்ந்த ஆசிரியையிடம் தங்கும் விடுதியில் மர்மநபர் ஒருவர் 8 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்றார்.

News image
Updated On :15 மே 2013, 6:48 am

ஜி.சுந்தரராஜன்

சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலுக்கு சுற்றுலா வந்த கேரளா மாநிலத்தைச் சேர்ந்த ஆசிரியையிடம் தங்கும் விடுதியில் மர்மநபர் ஒருவர் 8 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்றார்.

கேரளா மாநிலம் பந்தனம்திட்டா மாவட்டம் மங்கன்தரம்கூனி பகுதியைச் சேர்ந்த ஜெகன்சந்திரபாபு மனைவி லேகாகுமாரி (48). இவர் கேரளா மாநிலத்தைச் சேர்ந்த 42 பயணிகளிடம் பேருந்தில் தமிழகத்திற்கு 4 நாள்கள் சுற்றுலா பயணமாக வந்துள்ளார். திருப்பதி கோயிலுக்கு சென்று விட்டு செவ்வாய்க்கிழமை இரவு சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலை பார்க்க வந்தனர். கீழரதவீதியில் உள்ள தனியார் விடுதியில் தங்கியிருந்த லேகாகுமாரி காலை அறைக் கதவை திறந்து வெளியே வந்த போது மர்மநபர் ஒருவர் அவரது கழுத்திலிருந்த 8 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துக் கொண்டு தலைமறைவானார். இதுகுறித்து லேகாகுமாரி சிதம்பரம் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் நகர போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.