முதல் பட்டதாரி சான்றிதழ் பெறுவதற்காக வட்டாட்சியர் அலுவலகங்களில் மாணவர்கள் கூட்டம் அலைமோதுகிறது.
பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவு கடந்த 9ம் தேதி வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து, தேர்ச்சி பெற்ற மாணவர்கள் மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட உயர் படிப்பு படிப்பதற்கு விண்ணப்பித்து வருகின்றனர்.இந்த விண்ணப்பங்களில் கோரியுள்ள ஜாதி, வருமானம் மற்றும் இருப்பிடச் சான்றுகளும், இவற்றுடன் முதல் பட்டதாரிக்கான சான்றிதழ்களையும் இணைக்க வேண்டியுள்ளதால், இந்த சான்றிதழ்களை பெற்றிட மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் வட்டாட்சியர் அலுவலங்களில் குவிந்து வருகின்றனர்.
மக்கள் கூட்டத்தைத் தவிர்க்கும் பொருட்டு ஜாதி, இருப்பிடம் மற்றும் வருமான சான்றிதழ்கள் வழங்க தனியாக துணை வட்டாட்சியர் தலைமையில் ஒரு பிரிவும், முதல் பட்டதாரி சான்றிதழ் வழங்க மண்டல துணை வட்டாட்சியர் தலைமையில் ஒரு பிரிவும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.இருப்பினும், உயர் கல்வி சேர்வோர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளதால், அதற்கான சான்றுகள் பெற வருவோர்களின் எண்ணிக்கையும் அதிகமாக உள்ளது. இதனைத் தவிர்க்க கூடுதல் ஊழியர்களை நியமிக்க வேண்டும் என மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இன்று யாருக்கு சாதகம்? தினப்பலன்கள்!

இன்றைய ராசி பலன்கள் (23 ஏப்ரல் 2026) 12 ராசிகளுக்கும்! அனுகூலம் யாருக்கு?

தில்லியில் அதிகரிக்கும் வெப்பம்: 42 டிகிரி செல்சியஸாக பதிவு

கேஜரிவாலுக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணையிலிருந்து நீதிபதி விலகல்
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

