பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

பண்ருட்டி அரசு மருத்துவமனையில் குழந்தை மரணம் : உறவினர்கள் முற்றுகை

பண்ருட்டி அரசு மருத்துவமனையில் கவனக் குறைவால் குழந்தை மரணம் அடைந்ததாகக் கூறி உறவினர்கள் முற்றுகைப் போராட்டம் நடத்தினர்.

News image
Updated On :20 மே 2013, 6:43 am

சீனிவாசன்

பண்ருட்டி அரசு மருத்துவமனையில் கவனக் குறைவால் குழந்தை மரணம் அடைந்ததாகக் கூறி உறவினர்கள் முற்றுகைப் போராட்டம் நடத்தினர்.

பாலூர் மெயின்ரோடு தொட்டிக் கிராமத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவரது மனைவி பூங்கொடி (20). பூங்கொடி நிறைமாத கர்பிணியாக இருந்தார். இவருக்கு ஞாயிற்றுக்கிழமை காலை பிரசவ வலி ஏற்பட்டு பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இந்த நிலையில், இன்று அதிகாலை அவருக்கு பிரசவம் நடந்தது. ஆனால், குழந்தை இறந்தே பிறந்ததால், அவரது உறவினர்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின் கவனக்குறைவே இதற்குக் காரணம். இது போல் அதிகமான சம்பவங்கள் நடக்கின்றன. யாரும் ஒழுங்காக பணியாற்றுவதில்லை என்று கூறி உறவினர்கள் கோஷம் எழுப்பினர். மருத்துவமனை மருத்துவர்கள் மற்றும் ஊழியர்கள் மீது துறை வாரியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை வைத்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.