ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணி15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடி
/

சேலம் கஞ்சமலையில் ஆணின் எலும்புக் கூடு மீட்பு

சேலம் கஞ்சமலையில் ஆணின் எலும்புக் கூடு கிடப்பது இன்று தெரிய வந்துள்ளது. அதை மீட்டு காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On :20 மே 2013, 4:03 pm

சேலம் கஞ்சமலையில் ஆணின் எலும்புக் கூடு கிடப்பது இன்று தெரிய வந்துள்ளது. அதை மீட்டு காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 இளம்பிள்ளை அருகேயுள்ள கஞ்சமலையின் உச்சியில் ஆண் ஒருவரின் எலும்புக் கூடு கிடப்பதாக இரும்பாலை காவல் நிலையத்துக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்திவேல், கூடுதல் கண்காணிப்பாளர் சரோஜ்குமார் தாகூர் ஆகியோர் தலைமையில் காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.

 சடலத்தின் அருகில் அதிமுக கரை வேஷ்டி, வெள்ளை சட்டை, சந்தன நிற சால்வை ஆகியவை கிடந்தன. அந்த நபர் இறந்து பல வாரங்கள் இருக்கும் என்பதால் வெறும் எலும்புக் கூடு மட்டும் கிடப்பது தெரிய வந்துள்ளது.

 அவர் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர், அவர் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா என்பது குறித்து இரும்பாலை காவல்துறையினர் விசாரிக்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.