தகவல் கேட்பவர்கள் ஆணையத்தை அணுகும் நிலையை அதிகாரிகள் உருவாக்ககூடாது என மாநில தகவல் ஆணையர் சரோஜா தெரிவித்தார்.
கடலூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு துறைகளைச் சேர்ந்த தகவல் அலுவலர்களுகான பயிலரங்கம் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மக்கள் குறைதீர் அரங்கில் அண்மையில் நடந்தது. ஆட்சியர் ரா.கிர்லோஷ்குமார் தலைமை வகித்தார். பயிலரங்கில் தகவல் அளிக்கும் அலுவலர்களுக்கு தகவல் பெறும் சட்டத்தின் பல்வேறு பிரிவுகள் குறித்து விளக்கப்பட்டது.
இதில் மாநில தகவல் ஆணையர் சரோஜா பேசியதாவது, தகவல் கேட்பவர்களுக்கு தகவல்களை குறிப்பிட்ட தினங்களுக்குள் அளிக்க வேண்டும். மேல்முறையீடு செய்யும் தகவல் குறித்து சம்பந்தப்பட்ட அலுவலகத்திலேயே முடிவு செய்ய வேண்டும். தகவல் கேட்பவர்கள் ஆணையத்தை அணுகி பெற வேண்டும் என்ற நிலையை தவிர்த்தால், சட்ட ரீதியான நடவடிக்கைகளை எதிர்கொள்ள வேண்டிய தேவை ஏற்படாது என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.