அண்ணாமலைப் பல்கலையில் மாணவர்களுக்கு உதவும் தகவல் மையம் தொடக்கம்
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் அனுமதி சேர்க்கை குறித்த விபரங்களை அறிந்து கொள்ள உதவும் தகவல் மையம் தொடங்கப்பட்டுள்ளது.


சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் அனுமதி சேர்க்கை குறித்த விபரங்களை அறிந்து கொள்ள உதவும் தகவல் மையம் தொடங்கப்பட்டுள்ளது.
நிதிநெருக்கடி மற்றும் நிதிமுறைகேட்டில் சிக்கிய சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தை அரசு கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்ட பின்னர், தமிழகஅரசால் நியமிக்கப்பட்டு பொறுப்பேற்றுள்ள பல்கலைக்கழக நிர்வாகி ஷிவ்தாஸ்மீனா ஐஏஎஸ் பல்வேறு சீரமைப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறார்.
2013-14 கல்வி ஆண்டிற்கான பிஇ, பிஎஸ்சி விவசாயம், பிஎஸ்சி தோட்டக்கலை, எம்பிபிஎஸ், பிடிஎஸ், பிபிடி உள்ளிட்ட படிப்புகளுக்கு அனுமதி சேர்க்கை நுழைவுத்தேர்வு மூலம் நடத்தப்படவுள்ளது. நுழைவுத்தேர்வுகள் ஜூன் 7,8,9 தேதிகளில் தமிழகத்தில் 7 மையங்களில் நடத்தப்படுகிறது.
இந்நிலையில் மாணவ, மாணவியர்கள் அனுமதி சேர்க்கை தொடர்பான விபரங்களை அறிந்து கொள்ளவும், விண்ணப்பங்கள் பெறுவது குறித்தும் அறிந்து கொள்ளவும் பல்கலைக்கழக நிர்வாகி உத்தரவின் பேரில் பல்கலைக்கழக நிர்வாகக் கட்டட அலுவலகத்தில் கே பிரிவு அலுவலகம் அருகே தகவல் உதவி மையம் (MAY I HELP YOU) ஒன்று தொடங்கப்பட்டுள்ளது. வெளியூரில் உள்ள மாணவர்கள் விவரங்களைத் தெரிந்து கொள்ள தொடர்பு கொள்ள வேண்டிய மையத் தொலைபேசி எண்கள்: 04144- 238348, 238349.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...