சொத்தினை பிரித்துக் கேட்ட மருமகளை அடித்துக் கொன்ற மாமனார்
நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே குடும்பச் சொத்தினை பிரித்துக் கேட்ட மருமகளை அடித்துக் கொன்றார் அப்பெண்ணின் மாமனார்.


நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே குடும்பச் சொத்தினை பிரித்துக் கேட்ட மருமகளை அடித்துக் கொன்றார் அப்பெண்ணின் மாமனார்.
மயிலாடுதுறை - சேந்தங்குடி அருகே உள்ள சின்னநாகங்குடி அபிராமி நகரைச் சேர்ந்தவர் ராமன் (62). இவரது மகன் பாபு, மருமகள் அனிதா (28). பாபு பெங்களூரில் தங்கி வேலை பார்த்து வருகிறார். மருமகள் அனிதா, மாமியார் மாமனாருடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் ஒரு பிரச்னை தொடர்பாகப் பேச்சுவார்த்தை முற்றிய போது, தங்களுக்குச் சேர வேண்டிய சொத்தினை பிரித்துத் தருமாறு அவர் கேட்டுள்ளார். இதனால் கோபம் அடைந்த மாமனார் ராமன், மருமகள் அனிதாவை கம்பியால் தலையில் தாக்கியதில், அனிதா அந்த இடத்திலேயே உயிரிழந்தார். இது தொடர்பாக போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...