தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

 மானாமதுரை அருகே பெண் கழுத்தை அறுத்து தற்கொலை

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே பெண் ஒருவர் தனது கழுத்தை கத்தியால் அறுத்து தற்கொலை செய்து கொண்டார். மானாமதுரை அருகே சிறுகுடி கிராமத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம் மனைவி எல்லம்மாள்(34) இவர் அடிக்கடி இருதய நோயால் அவதிப்பட்டு வந்தார். இதனால் வாழ்க்கையில்

News image
Updated On :28 மே 2013, 5:45 pm

யுகன்

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே பெண் ஒருவர் தனது கழுத்தை கத்தியால் அறுத்து தற்கொலை செய்து கொண்டார். மானாமதுரை அருகே சிறுகுடி கிராமத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம் மனைவி எல்லம்மாள்(34) இவர் அடிக்கடி இருதய நோயால் அவதிப்பட்டு வந்தார். இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்து தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்த எல்லம்மாள் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் கத்தியை எடுத்து தனது கழுத்தை அறுத்துக்கொண்டார். அதன்பின் கையையும் அறுத்துக் கொண்டார். பின்னர் மயக்கமடைந்து கீழே  விழுந்து விட்டார். அக்கம்பக்கத்தில் வசித்தவர்கள் இதைப் பார்த்து எல்லம்மாளை சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி எல்லம்மாள் இறந்தார். மானாமதுரை சிப்காட் போலீசார் இது குறித்து வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.