கரை திரும்பிய படகு கவிழ்ந்து விபத்து: 15 மீனவர்களைக் காணவில்லை
நாகை மாவட்டம் பழையாறு மீன்பிடி துறைமுகத்தின் அருகே இன்று ஒரு படகு கவிழ்ந்தது. இதில் இருந்த 15 மீனவர்களை தேடி வருகின்றனர்.


நாகை மாவட்டம் பழையாறு மீன்பிடி துறைமுகத்தின் அருகே இன்று ஒரு படகு கவிழ்ந்தது. இதில் இருந்த 15 மீனவர்களை தேடி வருகின்றனர்.
கடல்சீற்றம் காரணமாக அந்தப் படகு கவிழ்ந்ததாகத் தெரிகிறது.
இன்று காலை மீன் பிடிப்பதற்காக மீன்பிடி விசைப்படகில் 35 மீனவர்கள் கடலுக்குச் சென்றனர். கடல்சீற்றம் அதிகம் இருந்ததால் படகு கட்டுப்பாட்டை இழந்ததாம். பழையாறு முகத்துவாரம் அருகே வந்த படகு திடீரெனக் கவிழ்ந்தது. அதில் இருந்தவர்களில் 20 பேர் கரையேறிவிட்டார்கள் 15 பேரைக் காணவில்லை என்று கூறப்படுகிறது. அவர்களைத் தேடும் பணியில், சீர்காழி தீயணைப்புப் படை மற்றும் போலீஸார் ஈடுபட்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...