சிதம்பரம் ஸ்ரீமெய்கண்டதேவர் கோயில் குடமுழுக்கு: 3 மடாதிபதிகள் பங்கேற்பு
சிதம்பரம் மாலைக்கட்டித்தெருவில் அமைந்துள்ள திருவாவடுதுறை ஆதீன கிளை மடத்தில் உள்ள ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீநடராஜப்பெருமான் மற்றும் ஸ்ரீமெய்கண்ட தேவநாயனார் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம் (நவ.14-ம் தேதி) வியாழக்கிழமை காலை 10 மணிக்கு வெகு சிறப்பாக நடைபெற்றது. 3 மடாதிபதிகள் பங்கேற்று சிறப்பித்தனர். திரளான பக்தர்கள் பங்கேற்று கும்பாபிஷேகத்தை கண்டு தரிசித்தனர்.









