பாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்விஜம்மு-காஷ்மீரில் வீட்டிற்கு வெளியே வெடித்த மர்ம பொருள் தமிழ்நாடு, புதுச்சேரியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியமைக்கும்: பியூஷ் கோயல் சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: இன்று மாலை தீர்ப்பு!
/

மதுரை:அட்டாக்பாண்டி மனைவி மீது வழக்கு, அண்ணன் மகன் கைது

மதுரை அவனியாபுரத்தில் வீட்டு உரிமையாளருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக வெள்ளிக்கிழமை அட்டாக்பாண்டி மனைவி மீது அவனியாபுரம் போலீஸார்

News image
Updated On :22 நவம்பர் 2013, 3:01 pm

மது

மதுரை அவனியாபுரத்தில் வீட்டு உரிமையாளருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக வெள்ளிக்கிழமை அட்டாக்பாண்டி மனைவி மீது அவனியாபுரம் போலீஸôர் வழக்கு பதிவுசெய்து தேடி வருகின்றனர்.இதேவழக்கில் அட்டாக்பாண்டியின் அண்ணன் மகனை போலீஸார் கைது செய்துள்ளனர்.

மதுரை தெற்குவெளி வீதியை சேர்ந்தவர் பிரிதிவிராஜ் எல்.ஐ.சி ஊழியர்.இவருக்கு சொந்தமாக வில்லாபுரம் ஹவுசிங்போர்டு காலணியில் உள்ள வீட்டில் திமுக பிரமுகர் அட்டாக்பாண்டி குடியிருந்து காலிசெய்ய மறுத்து கொலைமிரட்டல் விடுத்தாரம். இதுகுறித்து அவனியாபுரம் போலீஸில் புகார் செய்யப்பட்டு அதனடிப்படையில் 3 வழக்கு பதிவு செய்து போலீஸார் அட்டாக் பாண்டியை தேடி வருகின்றனர்.

இந்நிலையில் தனது வீட்டிற்கு வெள்ளையடிக்க வியாழக்கிழமை பிரிதிவிராஜ் வேலையாட்களுடன் வந்தாரம். அங்கு வந்த அட்டாக்பாண்டியின் மனைவி தயாளுஅம்மாள் மற்றும் அட்டாக்பாண்டியின் அண்ணன் மகன் பொன்னுமணி ஆகிய இருவரும் பிரிதிவிராஜை தகாத வார்த்தைகளால் பேசி கொலைமிரட்டல் விடுத்தார்களாம்.

இதுகுறித்து அவனியாபுரம் போலீஸில் பிரிதிவிராஜ் கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குபதிவு செய்து பொன்னுமணியை(24) கைது செய்தனர்.மேலும் அட்டாக்பாண்டியின் மனைவி தயாளுஅம்மாளை தேடி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.