இன்று பிரசாரத்தை தொடங்குகிறாா் எடப்பாடி பழனிசாமி நெருங்கும் காலக்கெடு- ஒடிஸா, சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் முக்கிய தலைவா்கள் சரண்ரயில்வேயில் புதிய சீா்திருத்தம்: பயணச்சீட்டு ரத்து கட்டணம் திரும்ப கிடைக்க ஏப்ரல் முதல் புதிய நடைமுறை மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்ஆப்கானிஸ்தானில் ஓராண்டு சிறைக்குப் பின் அமெரிக்கா் விடுதலை பேரவைத் தோ்தல்: ஐபிஎல் போட்டிகளை வேறு தேதிகளுக்கு மாற்றக் கோரி மனு கருணைக் கொலைக்கு அனுமதிக்கப்பட்ட ஹரீஷ் ராணா தில்லி எய்ம்ஸில் உயிரிழப்பு
/

நவ.30, டிச.1-ல் சிதம்பரத்தில் மாவட்ட அளவிலான சதுரங்க போட்டி!

சிதம்பரம் சதுரங்க சந்திப்புக்கழகம், கேசினோ மற்றும் வெளிச்சம் குழுமம் ஆகியவை இணைந்து நடத்தும் கடலூர் மாவட்ட அளவிலான 9-வது சதுரங்கப் போட்டி சிதம்பரம் வி.எஸ்.டி மண்டபத்தில் வருகிற நவம்பர் 30, டிசம்பர் 1 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது.

News image
Updated On :24 நவம்பர் 2013, 7:23 am

ஜி.சுந்தரராஜன்

சிதம்பரம் சதுரங்க சந்திப்புக்கழகம், கேசினோ மற்றும் வெளிச்சம் குழுமம் ஆகியவை இணைந்து நடத்தும் கடலூர் மாவட்ட அளவிலான 9-வது சதுரங்கப் போட்டி சிதம்பரம் வி.எஸ்.டி மண்டபத்தில் வருகிற நவம்பர் 30, டிசம்பர் 1 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது.

இதுகுறித்து சதுரங்க சந்திப்புக்கழக தலைவர் கேசினா எஸ்.சேகர் தெரிவித்தது: மாவட்ட அளவிலான 9வது சதுரங்க போட்டி நவ.30, டிச.1 ஆகிய இரு தேதிகளில் நடைபெறுகிறது. மேலும் நவ.30-ம் தேதி மாலை 6 மணிக்கு நடந்து முடிந்த உலக சதுரங்க போட்டியின் ஆய்வரங்கமும், டிசம்பர் 1-ம் தேதி மாலை போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்படுகிறது.

போட்டியில் பங்கேற்க விரும்புவர்கள் நவ.30ம் தேதி காலை 10 மணிக்குள் நுழைவு படிவங்களை அனுப்பி வைக்க வேண்டும். நுழைவு படிவங்கள் அண்ணாமலைநகர், அம்மாப்பேட்டை வெளிச்சம் கிளைகளிலும் மற்றும் அனைத்து கேசினோ கிளைகளிலும் கிடைக்கும் என எஸ்.சேகர் தெரிவித்துள்ளார்.

விபரங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய செல்போன்: 94423 18080.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.