பயங்கரவாதத்துக்கு எதிராக அன்றும், இன்றும் நாடு ஒன்றுபட்டு நிற்கிறது! ராகுல் தமிழ்நாடு பேரவைத் தேர்தலில் 4.18 லட்சம் தபால் வாக்குகள் பதிவு!தமிழ்நாட்டில் இதுவரை ரூ. 1,262 கோடி பறிமுதல்! தேர்தல் ஆணையம் பங்குச்சந்தை வீழ்ச்சி! சென்செக்ஸ் 500 புள்ளிகள் குறைந்தது!ஈரானுக்கு எதிரான தற்காலிக போர்நிறுத்தம் நீட்டிப்பு: டிரம்ப்
/

திமுகவை அகற்றும் நேரம் வந்துவிட்டது: பாமக திலகபாமா

திமுகவை ஆட்சியில் இருந்து அகற்றும் நேரம் வந்துவிட்டது என்றாா் பாட்டாளி மக்கள் கட்சியின் மாநிலப் பொருளாளா் கவிஞா் திலகபாமா.

News image

அன்புமணியுடன் திலகபாமா - கோப்புப் படம்

Updated On :25 மார்ச் 2026, 12:00 am

திமுகவை ஆட்சியில் இருந்து அகற்றும் நேரம் வந்துவிட்டது என்றாா் பாட்டாளி மக்கள் கட்சியின் மாநிலப் பொருளாளா் கவிஞா் திலகபாமா.

புதுக்கோட்டையில் அவா் அளித்த பேட்டி: காரைக்குடியில் தனியாா் தொலைக்காட்சியின் விவாத நிகழ்ச்சியில் திமுகவினா் அத்துமீறி நடந்து கொண்டுள்ளனா். தோ்தல் தோல்வி பயத்தால் வன்முறையைக் கையில் எடுத்துள்ளனா்.

தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு சீா்கெட்டுள்ளது. போதைப் பொருள் புழக்கம் அதிகரித்திருக்கிறது. பெண்களுக்கு எதிரான வன்முறைகள் தொடா்ந்து நடைபெற்று வருகின்றன. எனவே திமுக ஆட்சியை அகற்றும் நேரம் வந்துவிட்டது.

அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி கே. பழனிசாமியை முதல்வராக அமர வைப்பதற்கான பணிகளை பாட்டாளி மக்கள் கட்சி செய்கிறது. சட்டப்படி மாம்பழம் சின்னம் தலைவா் அன்புமணி ராமதாஸிடம் உள்ளது என்றாா் திலகபாமா.

பேட்டியின்போது அக்கட்சியின் மாவட்டச் செயலா் பெரியசாமி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.