ஸ்ரீமுஷ்ணத்தில் 7 மாட்டு வண்டிகள் பறிமுதல்: ஸ்ரீமுஷ்ணம் அருகே வெள்ளாற்றில் அனுமதியின்றி மணல் ஏற்றிச் சென்ற 7 மாட்டு வண்டிகளை சப்-இன்ஸ்பெக்டர் ஆசைத்தம்பி மற்றும் போலீஸார் பிடித்து பறிமுதல் செய்தனர். மேலும் ஸ்ரீமுஷ்ணம் எம்ஜிஆர் நகரைச் சேர்ந்த துரை (25), தனவேல் (34), அரியலூர் மாவட்டம் ரெட்டிசத்தூரைச் சேர்ந்த கதிரேசன் (55), விளந்தையைச் சேர்ந்த கணபதி (50), ஆண்டிமடத்தைச் சேர்ந்த இளையராஜா (23), மணக்கொல்லையைச் சேர்ந்த லாசர் (35), வரதராஜன்பேட்டையைச் சேர்ந்த அந்தோணிஜோசப் (38) ஆகிய 7 பேர் மீது ஸ்ரீமுஷ்ணம் போலீஸார் வழக்குப் பதிந்து மேல்விசாரணைக்கு சிதம்பரம் உதவிஆட்சியர் எம்.அரவிந்திற்கு பரிந்துரை செய்துள்ளனர்.