இஸ்ரேல் தாக்குதலில் ஈரான் பாதுகாப்பு அமைச்சர் கொலை? சென்னை - துபை, தோஹா, அபு தாபி, பஹ்ரைன் விமானங்கள் ரத்து!ஈரானில் பள்ளி மீது தாக்குதல்: பலியான மாணவிகளின் எண்ணிக்கை 85ஆனது!டி20 உலக கோப்பை அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்த பாகிஸ்தான்!திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள் மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் மிகுந்த கவலை அளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் அறிக்கை!துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுமத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!
/

கூடுதல் வரதசட்சணை கேட்டு மனைவியை துன்புறுத்திய முன்னாள் ராணுவ வீரர் கைது

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள மம்சாபுரம், கல்விநாதர் தேவர் தெருவைச் சேர்ந்தவர் ஜான்சிராணி (38). இவருக்கும் பெரும்புத்தூர், அம்பேத்கர் தெருவைச் சேர்ந்தவர் பாண்டி மகன் குமார் (40)

News image
Updated On :3 ஜனவரி 2024, 7:00 pm

ஜெயகுமார்

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மனைவியை துன்புறுத்திய அவரது கணவரான முன்னாள் ராணுவ வீரரை போலீஸார் கைது செய்தனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள மம்சாபுரம், கல்விநாதர் தேவர் தெருவைச் சேர்ந்தவர் ஜான்சிராணி (38). இவருக்கும் பெரும்புத்தூர், அம்பேத்கர் தெருவைச் சேர்ந்தவர் பாண்டி மகன் குமார் (40) என்பவருக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது.

திருமணத்தின்போது 15 பவுன் நகைகளும், ரூ.20 ஆயிரம் ரொக்கமும் வரதட்சிணையாக கொடுத்துள்ளார்கள். ராணுவத்தில் பணிபுரிந்து வந்த குமார் 2011-ம் ஆண்டு ஓய்வு பெற்றுள்ளார். ஓய்வுபெற்று வந்தவுடன் மனைவியின் நகையை அடமானம் வைத்தாராம். மேலும் 10 பவுன் நகை, ரூ.1 லட்சம் கொடுத்தால்தான் சேர்ந்து வாழ முடியும் என்று கூறி மனைவியை குமார் துன்புறுத்தினாராம். இது குறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஜான்சிராணி புகார் செய்தார். போலீஸார் வழக்குப் பதிவு செய்து குமாரைக் கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.