திருத்துறைப்பூண்டி அருகே பஸ்- பள்ளி வேன் மோதல்: 22 பேர் காயம்
திருத்துறைப்பூண்டி அருகே நாகப்பட்டினத்தில் இருந்து பட்டுக்கோட்டை சென்று கொண்டிருந்த தனியார் பஸ்ஸும், பள்ளிக்குழந்தைகளை ஏற்றி வந்த வேனும், நெடுங்குளம் கிராமத்தில் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இதில் 14 மாணவிகள், 7 மாணவர்கள், தனியார் பஸ் ஓட்டுநர் என 22 பேர் காயம் அடைந்தனர்.










