வாய்க்கால் தூர்வாருவதாக உறுதி: இந்து ஆலய பாதுகாப்புக் குழு போராட்டம் வாபஸ்!
சிதம்பரம் தீர்த்தகுளமான ஓமக்குளத்திற்கு நீர் வரும் வாய்க்காலை ரூ.4 லட்சம் செலவில் தூர்வாருவதாக பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் உறுதியளித்து கடிதம் அளித்ததால் இந்து ஆலய பாதுகாப்புக்குழு சார்பில் நடத்த இருந்த அனைத்து போராட்டங்களும் கைவிடப்பட்டன என ஆலய பாதுகாப்புக்குழுத் தலைவர் மு.செங்குட்டுவன் தெரிவித்துள்ளார்.









