தேர்தலுக்கிடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைந்தார்!தமிழகத்தில் கோடை வெப்பம் குறைய வாய்ப்பு.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை!தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலிதுரந்தர் - 2 சிறப்பு திரையிடல்: ஹிந்தி தவிர பிறமொழிக் காட்சிகள் ரத்து!பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!
/

விவசாயி வீட்டில் 20 பவுன் நகை கொள்ளை

திருக்கோவிலூர் அடுத்துள்ள ஆலம்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் நடராஜன்(59). விவசாயி. புதன்கிழமை இரவு தனது குடும்பத்தினருடன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். காற்றுக்காக

News image
Updated On :28 நவம்பர் 2013, 12:10 pm

ச.​ கார்த்​தி​கே​யன்

விழுப்புரம் மாவட்டம்  திருக்கோவிலூர் அருகே விவசாயி வீட்டில் நள்ளிரவில் சுமார் 20 பவுன் நகை திருடப்பட்டுள்ளது.

 திருக்கோவிலூர் அடுத்துள்ள ஆலம்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் நடராஜன்(59). விவசாயி. புதன்கிழமை இரவு தனது குடும்பத்தினருடன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். காற்றுக்காக வீட்டின் முன்பக்க கதவைத் திறந்து வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது.

 இந்நிலையில் வியாழக்கிழமை காலையில் பார்த்தபோது வீட்டின் முன்பக்க அறையில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு பொருள்கள் சிதறி கிடப்பதைக் கண்டு நடராஜன் அதிர்ச்சியடைந்தார்.

 பீரோவில் வைத்திருந்த 20 பவுன் நகையை காணவில்லை. யாரோ மர்ம நபர்கள் நள்ளிரவில் வீடு புகுந்து பீரோவை உடைத்து நகையை கொள்ளையடித்துச் சென்றது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ.3 லட்சம் ஆகும்.

 தகவலறிந்த டிஎஸ்பி நரசிம்மவர்மன் மற்றும் அரகண்டநல்லூர் காவல் நிலைய போலீஸôர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். மேலும் மோப்ப நாய் மற்றும் கைரேகை நிபுணர்களின் சோதனையும் நடத்தப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.