அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியர்-ஊழியர் சங்க கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்
பல்கலைக்கழக ஊழியர்களுக்கு ஆட்சி மன்றம் மற்றும் ஆளவை மன்றங்களில் பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும் என்ற அகில இந்திய பல்கலைக்கழகங்களின் ஊழியர் கூட்டமைப்பின் கோரிக்கையை ஆதரித்து


அண்ணாமலைப் பல்கலைக்கழக வளாகத்தில் வியாழக்கிழமை பணிநேரம் முடிந்த பிறகு பல்கலைக்கழக ஆசிரியர்-ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பல்கலைக்கழக ஊழியர்களுக்கு ஆட்சி மன்றம் மற்றும் ஆளவை மன்றங்களில் பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும் என்ற அகில இந்திய பல்கலைக்கழகங்களின் ஊழியர் கூட்டமைப்பின் கோரிக்கையை ஆதரித்து அண்ணாமலைப் பல்கலைக்கழக வளாகத்தில் தமிழ்நாடு அனைத்து பல்கலைக்கழக அலுவலர் சங்கங்களின் கூட்டமைப்பு மற்றும் பல்கலைக்கழக ஆசிரியர், ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு அனைத்து பல்கலைக்கழக அலுவலர் சங்க கூட்டமைப்பு தலைவர் சி.மதியழகன் தலைமை வகித்தார். பொதுச்செயலாளர் ரவி முன்னிலை வகித்தார். ஆசிரியர்-ஊழியர் சங்க கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ரா.உதயசந்திரன், செயலாளர் பாஸ்கரன், பொருளாளர் ராஜேந்திரன், ஊழியர் சங்க துணைச் செயலாளர் துரை, நிர்வாகிகள் சுப்பிரமணியன், அசோகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...