தற்போது அண்ணாமலைப் பல்கலைக்கழகம் அரசு முழுக்கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டு அரசாணை பிறப்பிக்கப்பட்டதை அடுத்து ஏற்கனவே பணிமூப்பு அடிப்படையில் நியமிக்கப்பட்ட பேராசிரியர் ஜே.வசந்தகுமார், பல்கலைக்கழக நிர்வாகி ஷிவ்தாஸ்மீனாவால் வேளாண்புல முதல்வராக மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து புதிய முதல்வராக ஜே.வசந்தகுமார் வியாழக்கிழமை பொறுப்பேற்றார்.மேலும் பல்கலைக்கழகத்தில் பணிமூப்பு அடிப்படையில் நியமிக்கப்படாமல் பணியாற்றி வரும் புல முதல்வர்கள், துறைத் தலைவர்கள் அனைவரும் விரைவில் மாற்றம் செய்யப்படுவார்கள் என பல்கலைக்கழக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.