பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

கடையநல்லூர் அருகே பைக்குகள் மோதல்: 2 பேர் பலி

திருநெல்வேலி மாவட்டம் கடையநல்லூர் அருகே நேற்று (செவ்வாய்) இரவு 11.30 மணி அளவில் மேலக் கடையநல்லூர் ஐஐடி நகரைச் சேர்ந்த ஐயப்பன் (23), காளி (30) இருவரும் பைக்கில் சென்றனர். ஐயப்பனுக்கு காளி அத்தான் முறை உறவு. அவர்கள் இருவரும்,

News image
Updated On :16 அக்டோபர் 2013, 5:09 am

குமார முருகன்

திருநெல்வேலி மாவட்டம் கடையநல்லூர் அருகே நேற்று (செவ்வாய்) இரவு 11.30 மணி அளவில் மேலக் கடையநல்லூர் ஐஐடி நகரைச் சேர்ந்த ஐயப்பன் (23), காளி (30) இருவரும் பைக்கில் சென்றனர். ஐயப்பனுக்கு காளி அத்தான் முறை உறவு. அவர்கள் இருவரும், கடையநல்லூர் திரையரங்கு அருகே வந்தபோது, உசிலம்பட்டியைச் சேர்ந்த கண்ணன், மற்றும் அவருடைய நண்பரான மதுரை பேரையூரைச் சேர்ந்த கண்ணன் இருவரும் எதிரே ஒரு பைக்கில் வந்தனர். இவர்கள் இருவரும் கடையநல்லூரில் உள்ள நெல் அறுவை மில்லில் பணி புரிகிறார்கள். திரையரங்கு அருகே வந்த போது எதிர்பாராத விதமாக இரு பைக்குகளும் வேகமாக மோதின. இதில் ஐயப்பன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். காளி திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தார். மற்ற இருவரும் நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.