ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

தனியார் நிறுவன ஊழியர் மனைவிதூக்கிட்டுத் தற்கொலை

தூத்துக்குடி சுந்தரவேல்புரம் 6வது தெருவை சேர்ந்தவர் ராமலிங்கம். தனியார் ஏற்றுமதி நிறுவனத்தில் வேலைபார்த்து வருகிறார். இவரது மனைவி இந்துமதி (வயது 23). திருமணமாகி 3 ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.

News image
Updated On :19 அக்டோபர் 2013, 5:26 pm

INBARAJ

தூத்துக்குடியில் தனியார் நிறுவன ஊழியரின் மனைவி வெள்ளிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

தூத்துக்குடி சுந்தரவேல்புரம் 6வது தெருவை சேர்ந்தவர் ராமலிங்கம். தனியார் ஏற்றுமதி நிறுவனத்தில் வேலைபார்த்து வருகிறார். இவரது மனைவி இந்துமதி (வயது 23). திருமணமாகி 3 ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில்,  ராமலிங்கத்துக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததால் தம்பதி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.  இதனால், வீட்டில் இருந்த இந்துமதி வெள்ளிக்கிழமை திடீரென தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாராம். இந்த சம்பவம் குறித்து தூத்துக்குடி வடபாகம் போலீஸôர் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருமணமான மூன்று ஆண்டுக்குள் இந்துமதி தற்கொலை செய்து கொண்டதால் வருவாய் கோட்டாட்சியரும் விசாரணை நடத்தி வருகிறார்.                        

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.